districts

கூண்டில் சிக்கிய கரடி முதுமலை வனப்பகுதியில் விடுவிப்பு

உதகை, ஆக.22- குந்தா வனப்பகுதியில் கூண்டில்  சிக்கிய கரடி, முதுமலை வனப்பகுதி யில் விடுவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உதகை மற் றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 65  சதவிகிதம் வனப்பகுதியை கொண்டுள் ளது. சமீப நாட்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி, காட்டெருமை, புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதி களில் அதிகமாக உலா வருகிறது. குறிப் பாக, மஞ்சூர் பகுதியில் கரடி மற்றும் காட்டெருமைகளும், கூடலூர் பகுதி யில் காட்டுயானைகளும், உதகையில் புலி நடமாட்டமும் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாக கரடி ஒன்று குந்தா வனப்பகுதிக்குட்பட்ட அதிக ரட்டி பிரிவு, அதிகரட்டி காவல் நிலையம் அருகில் உள்ள கக்காச்சி மேல் பாரதி நகர், கீழ் பாரதிநகர், எம்.ஜி.ஆர்.நகர்,  கெந்தளா, மகாராஜா எஸ்டேட் பகுதி யில் உள்ள குடியிருப்புகுள் நுழைந்து  கதவு மற்றும் ஜன்னல்களை சேதப் படுத்தி வந்தது. மேலும், வீட்டினுள் இருந்த உணவு பொருட்களை உண் டும், சேதப்படுத்தியும் வந்ததால், பொது மக்கள் கரடியை கூண்டு வைத்து பிடித்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஆக.7  ஆம் தேதியன்று கக்காச்சி பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாயன்று அதிகாலையில் அந்த  கூண்டில் கரடி சிக்கியது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையி னருக்கு தகவல் தெரிவித்தனர். இதைய டுத்து கக்காச்சி கிராமம் பகுதியில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடி யினை முதுமலை புலிகள் காப்பகம்  தெப்பகாடு வனச்சரகம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முது மலை புலிகள் காப்பகம் வனகால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் கரடியை பார்வையிட்டு பரிசோதனை செய்தார். இதில் கரடி நல்ல உடல்நிலையுடன் இருந்தது உறுதியானதால், தொட்டக் கட்டி பிரிவு, கக்கநல்லா வனப்பகுதியில் செவ்வாயன்று விடுவிக்கப்பட்டது.