திருப்பூர், ஜூலை 15 - கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தற்பொழுது உள்ள அன லாக் தொகையை முழுவதும் தள்ளு படி செய்ய தமிழக முதல்வர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் கோரிக்கை விடுத் துள்ளனர். ஒன்றிய அரசு கேபிள் டிவி ஒழுங் குமுறைச் சட்டம் கொண்டு வந்த பிறகு, கடந்த 2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் முறை நடைமுறைக்கு வந்தது. இந் நிலையில், 2017ஆம் ஆண்டுக்கு முன் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, அதை வசூலிக்கும் நடவடிக்கை யாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவு பிறப் பித்தது. இதை எதிர்த்தும், வசூல் நட வடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரியும் தமிழக கேபிள் டிவி ஆப ரேட்டர்கள் பொது நல சங்கம் சார் பிலும், சில உள்ளூர் கேபிள் டிவி ஆப ரேட்டர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது. இம்மனுவில், எந்த நோட்டீ சும், ஆதாரங்களும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, உள்ளூர் கேபிள் டிவி ஆப ரேட்டர்களிடம் இருந்து (அனலாக்) பாக்கி தொகையை வசூலிக்க தமிழ் நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தர விட்டார். இது குறித்து திருப்பூரில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் செய்தியாளர் களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட் டது. தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் முறை நடைமு றைக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் செலுத்த வேண்டிய அனலாக் (பாக்கி) தொகையை கட்ட வேண் டும் என அரசு கேபிள் டிவி கார்ப்ப ரேசன் கட்டளையிட்டது. தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்க ளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தோம், தற்போது இந்த வழக்கில் அனலாக் தொகை வசூலிக்க நீதி மன்றம் தடையாணை பிறப்பித்துள் ளது. கடந்த 2007ஆம் ஆண்டு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கடன் தொகை ரூ.16 கோடியை அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி தள்ளுபடி செய் தார். அதேபோல் கேபிள் டிவி ஆப ரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தற்பொழுது உள்ள இந்த அனலாக் தொகையை முழுவதும் தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தி னர் கோரிக்கை விடுத்தனர்.