districts

img

ஜவுளித் துறையைப் பற்றி பேச பாஜகவிற்கு அருகதை இல்லை!

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை. தினந்தோறும் மக்களைச் சந்திக்கிறாரோ இல்லையோ, மீடியாவை சந்தித்து வாய்க்கு வந்ததை அளந்து விடுகிறார். 20 ஆயிரம் புத்தகம் படித்தேன், 2 லட்சம் புத்தகங்கள் படித்தேன், இடஒதுக்கீட்டின் கீழ் நான் பயனடையவில்லை என நாள்தோறும், புதிது புதியாய் அளந்து விடுவார். 
அப்படி சமீபத்தில், கோவை  நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பி.ஆர். நடராஜனை பற்றி  ஒரு பொய்யை அளந்துவிட்டுள் ளார். அதாவது, ஜவுளித் தொழில்  முன்னேற்றம் பற்றியும், இறக்கு மதி, ஏற்றுமதி பற்றியும் நாடாளுமன்  றத்தில் பி.ஆர். நடராஜன் பேசவே இல்லை எனவும், இத்துறைக்கு சம்  பந்தப்பட்ட அமைச்சரைக் கூட அவர் சந்திக்கவில்லை எனவும் சொல்லியுள்ளார். 

அண்ணாமலைக்கு  ஒன்றும் தெரியவில்லை
அண்ணாமலை தொடர்ந்து பேசும் பொய்களில் ஜவுளித்துறை யையும் இப்போது சேர்த்திருக்கி றார். ஜவுளித் தொழில் குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எத்தனை முறை  நாடாளுமன்றத்தில் பேசியிருக்கி றார்... ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை எத்தனை முறைச்  சந்தித்திருக்கிறார்... குறிப்பாக, ஜவுளித்துறை குறித்தும், என்டிசி ஆலைகளை திறக்க வேண்டும் என்  பது குறித்தும், எத்தனை முறை  நேரில் முறையிட்டு இருக்கிறார் என்ற  விவரங்களை அண்ணாமலை நாடாளுமன்ற அலுவல் குறித்த தக வல்களைப் பெற்று தெரிந்து கொள்  ளலாம்.

வங்கதேச ஒப்பந்தம் பற்றி வாய் திறக்காதது ஏன்?
எது பிரச்சனை என்றால், இந்தி யாவில் 10-க்கும் மேற்பட்ட மாநி லங்களில் ஜவுளித்தொழில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக ஜவுளித் தொழில் செத்துக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வேலை இழந்துள்ளனர். பல  நூற்றுக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டிருக்கின்றன.

வங்கதேசத்துடன் செய்து கொண்ட (Anti- dumping duty)  பாதுகாப்புவாத வரி ஒப்பந்தத் தால், ஏராளமான துணியும், நூலும்  சீனாவின் மூலமாக இந்தியாவின் சந்தைகளுக்கு வந்து விட்டது. இத னால், இந்தியச் சந்தைகளில் நூல் தேக்கம், துணிகள் தேக்கம் என்ற நிலை வந்துவிட்டது. இதைப் பற்றி  பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த வர்கள் ஒரு வார்த்தை பேசுவதற்கு  முன்வருவார்களா?

ஊட்டி வளர்த்தும் முன்னேறாத குஜராத்
புதிய தொழில்கள் உருவாகும்  போது, குஜராத்திற்கு தரப்படும்  மானியங்கள் என்பது சாதாரண மானது அல்ல. அதிகப்படியான மானியங்கள் குஜராத்திற்கு தரப்  படுகிறது. இவ்வளவையும் பெற்றுக் கொண்டு அந்த மாநிலம் வளர்ந்ததா? என்றால், இல்லை. தமிழகத்தோடு ஒப்பீடு செய்கிற போது (non performance asset)  தொழில் தொடங்கி அதை சரிவர  நடத்த முடியாதவர்களின் எண் ணிக்கை குஜராத்தில் மிகக் கூடுத லாக இருக்கிறது. எதை நோக்கி  ஒன்றிய பாஜக அரசு பயணித்துக்  கொண்டிருக்கிறது என்பதற்கு, குஜ ராத்தில் தொழில் தொடங்குபவர் களுக்கு காட்டுகிற சலுகை மிகப் பெரிய உதாரணம். 

கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஏற்படுத்திய ஒன்றிய அரசு
‘இந்தியப் பருத்திக் கழ கத்தைப்’ (Cotton Corporation of  India - CCI) பொறுத்தவரை, இப்  போது சொல்கிறார்.. அதைக் கலைக்கலாம் என்று. உண்மையி லேயே ‘இந்தியப் பருத்திக் கழ கம்’ விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது; விவசாயிகளிடம் நியாய மான முறையில் பருத்தி கொள்  முதல் நடைபெற வேண்டும் என்ப தற்காகவும், உற்பத்தியாளர் களுக்கு மட்டுமே விநியோகிக்கப்  பட வேண்டும் என்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. இதுதான் சிசிஐயின் துவக்ககால விதிகளாக இருந்தது. ஆனால், நூலினை வணிகர்களுக்கும் கொடுக்கலாம் என்ற நிலைபாட்டை பாஜக அரசு  எடுத்த காரணத்தால், சிசிஐ என்பது  நுகர்வோரை, மில் நடத்த கூடிய வரை சுரண்டக்கூடிய அமைப்பாக, எல்லா வகையிலேயும் கொள்ளை  அடிக்கக் கூடிய அமைப்பாக மாற்  றப்பட்டுள்ளது. இதில் பாஜக வுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

ஜவுளித்துறை பற்றி ஒன்றும் தெரியாத ஒன்றிய அமைச்சர்

ஃபேப்ரிக் யார்ன் (Fabric Yarn)  என்றால் ஆதித்ய பிர்லா, லீசிக்  ஆகிய இவர்கள் தான் மேலாதிக்கம்  செலுத்துகிறார்கள். பாலியஸ்டர்  என்று சொன்னால் ரிலையன்ஸும்,  பாம்பே டையிங்கும் தான் ஆதிக்  கம் செலுத்துகின்றனர். எது பிரச் சனை என்றால், கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய, இந்த  நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி யோடு சம்பந்தப்பட்ட ஜவுளித் தொழில்  குறித்து, ஒன்றிய அமைச்சர் பியூஸ்  கோயலுக்கு ஒரு விவரமும் தெரி யாது என்பதுதான் உண்மை. பத்துத் துறைகளில் ஒரு துறை யாகத் தான் பியூஸ் கோயலுக்கு  ஜவுளித் துறையை கொடுத்திருக்கி றார்கள். ஜவுளி என்பது இந்த நாட்  டின் விவசாயத்துக்கு அடுத்தபடி யாக, வேலை வாய்ப்பு அளிக்கக்  கூடிய, பொருளாதார சுழற்சிக்கு பயன்படக்கூடிய தொழில் என்ற  முறையில் பாஜக அதை கவனிக்க வில்லை. இந்த பேருண்மையை மறைத்து திசை திருப்புவது என்  பது எந்த விதத்திலேயும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

என்டிசி ஆலையை மூடியநரேந்திர மோடி அரசு
இந்தியாவிலுள்ள என்.டி.சி. ஆலைகளை பொறுத்தவரை, நாளொன்றுக்கு இரண்டரை லட்சம்  பாலியஸ்டர் யார்ன்கள் உற்பத்தி செய்த நிறுவனங்கள் ஆகும். பாலி யஸ்டர் யார்னுக்கு மார்க்கெட் டில் என்.டி.சியின் பங்களிப்பு மேலா திக்கம் செலுத்தக்கூடியதாக இருந்  தது. ஆனால், கடந்த 4 ஆண்டு களாக அந்த ஆலை முடங்கிக் கிடக்கிறது. ஒரு ரூபாய் கூட இழப்பீடு இல்லாமல், ஒரு லட்சம்  கோடிக்கும் மேல் சொத்துக்களை கொண்ட என்.டி.சி. நிர்வாகத்தை முடக்கி விட்டு, கிட்டத்தட்ட 25 ஆயி ரம் தொழிலாளர்களுக்கு வேலை யை மறுத்துவிட்டு, ஜவுளித்துறை யை பற்றிப் பேசுவதற்கு பாஜக விற்கு எந்தத் தகுதியும் இல்லை. 

உலகம் முழுவதும் திரும்பிப் பார்த்த எல்.எம்.டபிள்யூ நிர்வாகம், தற்போது இஸ்ரோவுக்கான இயந்  திரங்களை தயாரித்துக் கொண்டி ருக்கிறார்கள். இதை எல்லாம் மறைக்கக் கூடாது. எனவே நாடா ளுமன்ற உறுப்பினர் மீது பழி போடு வதற்கோ, வேறு ஏதேனும் கார ணங்கள் சொல்லுவதற்கோ, ஜவு ளித்துறையை நாசமாக்கிய பாஜக வுக்கு எந்த அருகதையும் இல்லை.