districts

உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல்

ஈரோடு, ஜூன் 20- ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக மற் றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு நிரப்பப் பட்ட பதவியிடங்களில் இறப்பு, பதவி விலகல், காரணங்களினால் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் ஏற்பட்ட 16 காலியிடங்களை நிரப்பு வதற்காக இடைத்தேர்தல்கள் மொடக்குறிச்சி, பெருந் துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், கோபி செட்டிபாளையம், நம்பியூர், தூக்கநாயக்கன்பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி ஆகிய 11  ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அம்மாபேட்டை மற்றும் அத்தாணி ஆகிய 2 பேரூராட்சிகளிலும் நடைபெறவுள்ளது. இதற்காக 14 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 15 வாக்குச்சாவடிகள் மற்றும் 2 பேரூராட்சி வார்டு உறுப்பி னர்களுக்கு 2 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 17 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜூன் 27 ஆம் தேதி தொடங்கு கிறது. ஜூன் 28 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடை பெறும் எனவும், ஜூன் 30 ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறலாம் எனவும், வாக்குப்பதிவு ஜூலை 7 ஆம்  தேதி நடைபெற்று, ஜூலை 17 ஆம் தேதியன்று வாக்கு எண் ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.