உடுமலை, மார்ச் 14- உடுமலை நகராட்சியில் சாலை ஓர மழைநீர் வடிகால் கால்வாய்களில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுக ளின் கழிவுநீர் செல்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. உடுமலை நகராட்சியில் சுமார் 10 கோடி மதிப்பில் நக ரின் அனைத்து வார்டுகளில் இருக்கும் சாலையின் ஓரங்க ளில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட்டப்பட்டு உள் ளது. இந்த கால்வாய்கள் முறையாக பராமரிப்பு இல்லா மல் இருப்பதாலும், பாதாளச் சாக்கடை திட்டத்தில் உள்ள குளறுபடிகளின் காரணமாக சாக்கடை நீர் இந்த கால் வாய்களில் செல்கிறது. இதனால் பல கோடி செலவில் கட் டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய்கள் பயன் இல்லா மல் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், உடு மலை நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார் கள். கடந்த 2013 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்தின் சார் பில் 56.7 கோடி மதிப்பில் நகர்ப்பகுதி முழுவதும் சுமார் 97 கிலோ மீட்டர் நீளத்தில் 3900 இறங்கு குழாய்கள் மூலம் சாக்கடை நீர் சேகரிக்கப்பட்டு ஏரிப்பாளையம் பகுதி யில் 7.81 எம்.எல்.சி திறன் கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. இந்த பாதாளச் சாக்கடை திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாகவும், நகராட்சியில் இன்று வரை பல வணிக நிறுவனங்கள், வீடுகள் இணைக்கா மல் இருப்பாதல் தான் கழிவு நீர் மழைநீர் வடிகால் கால் வாய்களில் செல்கிறது. இதனால், தொற்று நோய் பரவும் ஆபாயம் உள்ளது நகராட்சி நிர்வாகம் இதை உடன டியாக தடுக்க வேண்டும் என்றார்கள்.