districts

img

புதர்மண்டிக் கிடக்கும் பூங்கா - சீரமைக்க கோரிக்கை

திருப்பூர், மார்ச் 30- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, செட்டிபாளையம் ஒன்றாவது வார்டில் உள்ள பூங்காவை, பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1ஆவது வார்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நமக்கு நாமே  திட்டத்தின் கீழ், கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ.8.80 லட்சம்  மதிப்பீட்டில் செட்டிபாளையம் பகுதியில் பூங்கா அமைக் கப்பட்டது. இதை அப்போதைய ஊரகத் தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு திறந்து வைத்தார். செட்டிபாளை யம் ஊராட்சியாக இருந்த போது திறந்து வைக்கப்பட்ட பூங்கா, தற்போது செட்டிபாளையம் திருப்பூர் மாநக ராட்சிக்குள் 1 ஆவது வார்டில் வருகிறது. இப்பூங்கா போதிய  பராமரிப்பு இன்றி, புதர் மண்டி காணப்படுகிறது. இப்பூங் காவை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகு தியில் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த போது உருவாக்கப்பட்ட பூங்கா  இது. இப்பகுதியில் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில்  உள்ளனர். இவர்களில் பலர் மாநில அளவில் கபடி போட்டிக ளில் விளையாடி உள்ளனர். மேலும், 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இங்கு கபடி பயிற்சி மேற்கொள்கின்றனர். வயதானோர் நடைப் பயிற்சி செய்யும் பாதை முழுவதும் புதர் மண்டி கிடக்கிறது. குழந்தை கள் விளையாடும் உபகரணங்கள் பழுதாகி உள்ளன. எனவே,  பூங்காவைப் பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு  வர வேண்டும் எனக் கூறினர்.