districts

img

சாலையோர குழியில் சிக்கிய பேருந்துக்கள்

மேட்டுபாளையம், செப்.2- பாதாள சாக்கடை திட்ட பணிக் காக தோண்டப்பட்ட சாலையோர குழி கள் முறையாக மூடப்படாததால் அடுத் தடுத்து சிக்கிகொண்ட அரசு பேருந்து களால் பயணிகள் அவதிக்குள்ளா கினர். கோவை மாவட்டம், மேட்டுப் ப்பாளையம் நகராட்சியில் உள்ள 33  வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்ட  பணிகள் துவக்கப்பட்டு கடந்த இரண்டு  ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடை பெற்று வருகிறது. ரூ.99 கோடி மதிப்பில்  பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடை பெற்று வரும் நிலையில், இப்பணி களை தனியார் ஒப்பந்ததாரர்கள் மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலை யில், இப்பணிகள் மிகவும் காலம் தாமத மாகவும், முறையாகவும் நடைபெற வில்லை. திட்டப்பணிக்காக போக்கு வரத்து மிகுந்த நகர சாலையை வெட்டி   தோண்பட்ட குழிகள் முறையாக மூடப் படாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளியன்று மாலை பெய்த மழை காரணமாக ஆங் காங்கே தோண்டப்பட்ட  குழிகளுக்கு மேல் நீர் தேங்கி நின்றது. இதனால் சனியன்று மேட்டுப்பாளையம், பத்திர காளியம்மன் கோவில் சாலையில் பயணிகளுடன் வந்த அரசு நகர பேருந்து கள் பாதாள சாக்கடை திட்ட பணி களுக்காக தோண்டப்பட்ட குழிகளில்  சிக்கி கொண்டது. வேலைக்கு செல் வோர், பள்ளி மாணவர்கள் என பல தரப்பட்ட மக்களும் அரசு பேருந்தில் பயணம் செய்த நிலையில், பேருந்து குழியில் இறங்கி பேருந்து ஒரு பக்க மாக சாய்ந்ததால் உள்ளே  இருந்தவர் கள் பதட்டத்துடன் அவசர அவசரமாக வெளியேறினர்.  இதனால் ஆவேசமடைந்த மக்கள்,  அங்கிருந்த பாதாள சாக்கடை திட்ட  ஒப்பந்த அதிகாரியை கேள்வி கேட்ட  நிலையில், எதுவாக இருந்தாலும் நக ராட்சி நிர்வாகத்தை கேளுங்கள், நான்  உங்களுக்கு பதில் கூற தேவையில்லை என அலட்சியமாக பதில் அளித்ததால் பொதுமக்களுக்கும் ஒப்பந்த அதிகரிக் கும் இடையே வாக்கு வாதம் ஏற் பட்டது.  இதனையடுத்து ஜேசிபி இயந்திரம்  வரவழைக்கப்பட்டு ஒரு மணி நேரம்   போராடி பேருந்துகள் சகதி குழிக்குள் ளிருந்து  மீட்கப்பட்டது. பள்ளி பேருந்து கள் உள்பட வாகனங்கள் பலவும் தினசரி  இப்பிரச்சனையை எதிர் கொள்வதால் பெரிய விபத்து ஏற்படும் முன்  மேட்டுப் பாளையம்  நகராட்சி நிர்வாகம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.