தென் மாவட்டங்களுக்கு சூலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு புதிய பொதுமக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வார்கள். விடுமுறை காலம் என்பதால் அதிகளவிலான பயணிகள் ஒரே இடத்தில் இருந்து புறப்படும் போது அதிக கூட்டத்தினால் பொது மக்களுக்கு சிரமம் ஏற்படும் என்ற வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் வகையில் போக்குவரத்துத் துறையினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஆகவே, தென் மாவட்டங்களுக்கு செல்ல பயணிகள் சூலூர் புதிய பேருந்து நிலையம் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு ஏற்பாடுகளாக போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, பேருந்துகள் நிறுத்த இடங்கள், மற்றும் பயணிகள் தங்கி செல்ல பாதுகாப்பு வசதிகள் கொண்ட அறை, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எந்த எந்த வழி தடங்களில் எவ்வளவு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.