districts

பட்டிப்பாடிக்கு பேருந்து சேவை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சேலம், டிச.13- ஏற்காட்டில் நடைபெற்ற மக்கள் சந் திப்பு முகாமில் பொதுமக்கள் வைத்த  கோரிக்கையை அடுத்து, பட்டிப்பா டிக்கு பேருந்து சேவை ஏற்படுத்தப்பட் டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம்,  நாகலூர் ஊராட்சி, முளுவி கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிலையிலான அலுவ லர்கள் மலைக்கிராம பகுதிகளுக்கு நேர டியாகச் சென்று பொதுமக்களிடம் கோரிக் கைகளை கேட்டறிந்தனர். போக்குவ ரத்து வசதிகள், குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றிருந்த தொடர்புடைய பொறுப்பு அலுவலர்களிடம் கோரிக்கை மனுக் களை பொதுமக்கள் வழங்கியிருந்த னர். பொதுமக்கள் அளித்த கோரிக்கை களின் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள தொடர்புடைய துறை அலு வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார். குறிப்பாக, ஏற்காடு ஊராட்சி  ஒன்றியம், பட்டிப்பாடி கிராமத்திற்கு  போக்குவரத்து வசதி வேண்டி பொதுமக் கள் வைத்த கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குநருக்கு ஆட் சியர் உத்தரவிட்டார்கள். அதன்படி பட் டிப்பாடி கிராமத்திற்கு பேருந்து இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத் தின் சார்பில், புதனன்று பேருந்து சேவை  ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.