districts

img

ஓய்வூதிய உயர்வு கோரிக்கை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 22- ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஈரோட் டில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஐனவரி 2017 முதல் 15 சதவிகித உயர்வுடன் ஓய்வூதிய மறு நிர்ணயம் செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஒன் பது மாத பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.  சிஜிஹெச்எஸ்எல் உள்ள குறைபாடுகளைக் களைய வேண் டும். பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை நிறை வேற்ற வேண்டும். விருப்ப ஓய்வில் சென்றவர்களுக்கு உரிய  ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஈரோடு டெலிபோன் பவன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ராமச்சந்திரன் மற்றும் முகமது ரபீக் தலைமை தாங் கினர். இதில், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலை வர் மாணிக்கம், துணைத்தலைவர் பரமசிவம், ஊழியர் சங்க  செயலாளர் பாலு, அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கச்  செயலாளர் ராமசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சௌந்தர ராஜன் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினார். இதில், பொரு ளாளர் மணியன் உள்ளிட்ட ஏராளமான ஓய்வூதியர்கள்  கலந்து கொண்டனர். முடிவில் சொங்கப்பன்  நன்றி தெரி வித்தார்.