districts

img

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க 22ஆவது அமைப்பு தின விழா

திருப்பூர், மார்ச் 22 - பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உடுமலை கிளை வளா கம் முன்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் 22ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும்  இனிப்பு வழங்கி சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட  உதவித்தலைவர் என்.பாபு தலைமை ஏற்றார். மே மாதம் ஓய்வு  பெறவுள்ள கருணாநிதி கொடி ஏற்றி வைத்தார். உடுமலை  கிளை பொருளாளர் ஏ.கமலசேகரன் இனிப்பு வழங்கினார். இந்த கூட்டத்தில் மாநில உதவிச்செயலாளர் பி.கல்யாண ராமன் சிறப்புரை ஆற்றினார்.  ஓய்வூதியர் சங்கத்தைச் சேர்ந்த  பி.வெங்கடேசன், எம்.காந்தி, என்.சக்திவேல்  உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட உதவி தலைவர் வி.பழனிச்சாமி நன்றி கூறி னார். அதேபோல் திருப்பூரிலும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  22ஆவது அமைப்பு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பா.சௌந்தரபாண்டி யன் வாழ்த்திப் பேசினார்.