திருப்பூர், செப்.16- பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியா ருக்கு தாரைவார்ப்பதைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்். திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் பென் ஷனர் சங்க தலைவர் ஏ.முகமது ஜாபர் தலைமை தாங்கினார். பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலை வர் பி. கல்யாணராமன், பென்சனர் சங்க மாவட்ட நிர்வாகி கணேசன், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப் பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில உதவி செயலாளர் எம். முத்துக்கு மார், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் எஸ். சுப்பி ரமணியன், கே.விஸ்வநாதன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
முடிவில் கிளை செயலா ளர் சங்கிலிதுரை நன்றி கூறினார். இதேபோல், பல்லடத்தில் பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பாக நடை பெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத் தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர் வாகிகள் முருகசாமி, காந்தி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் கிளை செய லாளர் என்.சிவசாமி தலைமை வகித் தார். பி.ஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் செயலாளர் ஆர்.பிரபாகரன், மாவட்ட உதவிச் செயலாளர் எஸ். மனோகரன் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மேலும், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஏ.அண்ணாதுரை, ஜி.கருப்பசாமி, ஓய்வூதியர் சங்கத் தின் மாநில அமைப்பு செயலா ளர் பி.நிசார் அகமது, மாவட்ட பொறுப்பாளர் பி.தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.