பிஎஸ்என்எல் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சார்பில் பொள்ளாச்சியில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் பி.நிஷார் அகமது, தலைவர் மதன் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க கிளைத் தலைவர் சந்திரசேகரன், செயலாளர் ஆர்.பிரபாகரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.