districts

img

மேலதிகாரிகளுக்கு நீதி, ஊழியர்களுக்கு அநீதி

கோவை, ஜூன் 27– ஆட்சியாளர்களின் திட்டமிட்ட கார்ப் ரேட் நலனுக்கான கொள்கைகளால் பிஎஸ் என்எல் நிறுவனத்தின் வளர்ச்சியை முடக்கி விட்டு ஊழியர்களின் ஊதிய மாற்றத்தில் ஒன்றிய அரசும், பிஎஸ்என்எல் நிர்வாகமும் அநீதி இழைப்பதாகவும், இதில் நாடாளு மன்ற உறுப்பினர் தலையீடு செய்ய வேண் டும் என பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரி கள் கூட்டமைப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பி.,யிடம் கோரிக்கை மனு அளித்தனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள பிரச் சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தலையீடு செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் பிஎஸ் என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் கூட்ட மைப்பின் சார்பில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகேஷ்வரன், அதிகாரிகள் சங்கத்தின் மூர்த்தி, ஷியாம் சுந்தர், சாத்தப்பன் மற்றும் பிஎஸ்என்எல் ஒப் பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் வினோத் ஆகியோர் மனு அளித்த னர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஊதிய மாற்ற பிரச்சனை தீர்வு காணப் படாததால், ஒட்டுமொத்த ஊழியர்களும் ஏமாற்றத்துடனும், தன்முனைப்பின்றியும் உள்ளனர். ஊதிய மாற்றக்குழு பரிந்துரை யின் அடிப்படையில், பிஎஸ்என்எல் ஊழியர் கள் ஊதிய மாற்றத்திற்கு தகுதியானவர் கள் அல்ல என அரசாங்கம் முடிவு செய்துள் ளது. அரசாங்கத்தின் இந்த முடிவு தவறா னது.

ஊழியர்களின் கட்டுப்பாட்டு எல் லைக்கு அப்பாற்பட்ட காரணங்களாலேயே பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டமடைந்தது. பிஎஸ்என்எல் சேவைகளை விரிவாக்க தேவையான 2ஜி கருவிகளை வாங்க, 2007 முதல் 2012 வரை அரசாங்கத்தால் அனு மதிக்கப்படவில்லை. இந்த கால கட்டத்தில்  தான் இந்திய நாட்டில் மொபைல் சேவை  மகத்தான வளர்ச்சி கண்டது. மொபைல்  கருவிகள் வாங்க அனுமதிக்கப்படாததன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனம் தன்னை விரிவாக்கம் செய்து கொள்ள இய லவில்லை. இதன்விளைவாக தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும்  லாபத்தை ஈட்டின. பிஎஸ்என்எல் 2009-10 ஆம் ஆண்டிலிருந்து நஷ்டத்தை சந்தித்தது. இன்றும் கூட தனியார் தொலை தொடர்பு நிறு வனங்கள் 5ஜி சேவைகளை துவங்க தயாரா கிக் கொண்டிருக்கிறது. ஆனால், பிஎஸ் என்எல் 4ஜி சேவையினை கூட துவங்க இயலவில்லை.

பிஎஸ்என்எல்லிடம் உள்ள 49 ஆயிரத்து  300 மொபைல் டவர்களை 4ஜி சேவை தர தகு தியுள்ளதாக மேம்படுத்த முடியும். ஆனால், இவற்றை மேம்படுத்த ஒன்றிய அரசு அனு மதி வழங்கவில்லை. 4ஜி கருவிகளை சர்வ தேச தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்க,  பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அனுமதி  மறுக்கப்பட்டது. அதேநேரத்தில் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடோ போன் - ஐடியா ஆகிய அனைத்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும், நோக் கியா, எரிக்சன், சாம்சங் போன்ற சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து 46 கருவிகளை  வாங்கி பயன்படுத்தும் போது, அதே சர்வ தேச நிறுவனங்களிடம் இருந்து கருவி களை வாங்க, பிஎஸ்என்எல் நிறுவ னத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப் பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள்தான் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்க ளோடு பிஎஸ்என்எல் சமதளத்தில் போட்டி  போடுவதற்கு தடையாக இருந்தன. இதற்கு, எந்த வகையிலும் ஊழியர்களை காரண மாக்க முடியாது. மேலும், 7 ஆவது ஊதியக்குழு பரிந் துரையின் அடிப்படையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள பொது மேலாளர்கள், முதன்மை பொது மேலாளர்கள் மற்றும்  தலைமை பொது மேலாளர்கள் போன்ற வர்களுக்கு எல்லாம் ஊதிய மாற்றம், அல வன்ஸ்கள் மாற்றம் நடைபெற்று விட்டது. ஆனால், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் 3 ஆவது ஊதிய மாற்றமும் மறுக்கப்படுகி றது. இது வேறு எந்த பொதுத்துறையிலும் இல்லாத முறையற்ற நிலையாகும். எனவே, அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு இந்த பாரபட்சத்தை நீக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., தலையீடு செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள் ளது.