சேலம், ஜன.11- இணையதள இணைப்பில் இந்திய அள வில் முதலிடம் பிடித்த சேலம் கோட்ட பிஎஸ் என்எல் ஊழியர்கள் வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத் தில் தற்போது புதிய திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இணை யதள சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடுகள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் இணைய சேவையை புகுத்தி வருகிறது. தற்போது பிஎஸ்என்எல்-யை பயன் படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஒன்றிய மோடி அரசு பொதுத் துறை பிஎஸ்என்எல் நிறுனத்தை தொடர்ந்து சீர்குலைக்க முயன்று வருகிறது. இருப்பி னும், பிஎஸ்என்எல் ஊழியர்களின் தொடர்ச்சி யான அர்ப்பணிப்பு மிக்க பணியால் பிஎ1 என்எல் நிறுவனத்தை பாதுகாத்து வருகின்ற னர். எனவே, பிஎஸ்என்எல் மக்களின் நிறுவன மாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதள இணைப் பில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட் டத்தில் 37 ஆயிரம் இணைப்புகளும், தருமபுரி மாவட்டத்தில் 16 ஆயிரம் இணைப்புகள் என 57 ஆயிரம் புதிய இணைப்புகள் உள்ளது. பேன் இந்தியா திட்டத்தின் மூலம் பைபர் இணைய சேவை 1831 இணைப்புகள் வழங்கி, இந்திய அளவில் முதலிடத்தில் சேலம் பிஎ1 என்எல் கோட்டம் தேர்வாகியுள்ளது என கோட்டத்தின் மண்டல பொது மேலாளர் சி.பி. சுபா தெரிவித்தார். யுஎஸ்ஒ திட்டத்தின் மூலம் புதிதாக மாவட்டத்தில் 50 செல்போன் கோபு ரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள தாகவும், மலை கிராமங்களான கொல்லி மலையில் 15 செல்போன் கோபுரங்களும், ஏற் காடு பகுதியில் 12 4ஜி செல்போன் கோபு ரங்களும் புதிதாக அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், சேலம் செவ்வாய்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் முதல் பழைய பேருந்து நிலையம் பிஎஸ்என்எல் அலுவல கம் வரை நடைபெற்ற வெற்றி விழிப்புணர்வு பேரணியில் தொழிற்சங்க தலைவர் கோபால், மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உட்பட திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது, பிஎஸ்என்எல் சேவை குறித்து, அதன் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினர்.