districts

img

குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்திடுக

ஈரோடு, ஜன. 29- பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளர்க ளுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை உத்தர வாதம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங் கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் 7ஆவது மாநில மாநாடு ஈரோடு, என்ஆர் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. தேசியக் கொடியை  ஏற்றி வைத்து, பொது மாநாட்டிற்கு வரவேற் புக்குழு தலைவர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். அகில இந்திய துணைச் செயலா ளர் ஏ.பாபு ராதாகிருஷ்ணன் சங்கக் கொடி யினை ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழுச்  செயலாளர் கே.பழனிசாமி வரவேற்றார். மாநில உதவிச் செயலாளர் சி.பாஸ்கர் அஞ் சலி தீர்மானம் வாசித்தார். பிஎஸ்என்எல்இயு அகில இந்திய பொதுச் செயலாளரும், ஒப் பந்தத் தொழிலாளர் சங்கத் தலைவருமான பி. அபிமன்யு மாநாட்டை துவக்கிவைத்து உரை யாற்றினர். மாநிலச் செயலாளர் எம்.சையத் இத்ரீஸ் ஆண்டறிக்கை முன்வைத்தார். பிஎஸ்என்எல்இயு மாநிலச் செயலாளர் பி.ராஜு, பென்சனர் அசோசியேசன் மாநில  செயலாளர் ஆர்.ராஜசேகர், ஒப்பந்தத் தொழி லாளர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் எஸ். அழகு நாச்சியார் ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.  இம்மாநாட்டில், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும். சமூக நலப் பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும். பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆட்குறைப் பைக் கைவிட வேண்டும். 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை பிஎஸ்என்எல்க்கு வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.