சேலம், ஜன.7- பிஎப், இஎஸ்ஐ போன்ற சட்ட, சமூக பாது காப்பு உரிமைகள் வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் சேலம் மாவட்ட 7 ஆவது மாநாடு, சிஐடியு அலுவலக கூட்ட ரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். சங்கத்தின் தேசியக் கொடியை மாவட்ட உதவிச்செயலாளர் சண் முகம், மாநிலக்கொடியை மாவட்டப் பொரு ளாளர் சி.பாஸ்கர் ஆகியோர் ஏற்றி வைத்த னர். மாவட்ட உதவித்தலைவர் பி.செல்வம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்டச் செயலாளர் எம்.செல்வம் வரவேற் றார். தமிழ் மாநில பொதுச்செயலாளர் எம். சையத் இத்ரீஸ் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட் டச் செயலாளர் தமிழ்மணி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் இ. கோபால், தலைவர் ஹரிகரன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரையாற்றினர். இம்மாநாட்டில், ஒப்பந்த ஊழியர்க ளுக்கு மாதந்தோறும் முறையான தேதியில் சம்பளம் வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களை நிறை வேற்ற வேண்டும். ஆட்குறைப்பு செய்யும் நடை முறையை கைவிட வேண்டும். அவுட்சோர் சிங் முறையை கைவிட்டு, பழைய தொழிலா ளர் ஒப்பந்த முறையை அமல்படுத்த வேண் டும். ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண் டும். சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராக ராஜன், மாவட்டச் செயலாளராக செல்வம், மாவட்டப் பொரு ளாளராக போறார் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.