ஈரோடு,மார்ச் 12- ஒப்பந்த ஊழியர்களின் சம்பள நிலுவைகளை உடனடியாக வழங்க கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 9 மாத காலமாக ஊதியம் தரப்பட வில்லை. மாதக் கணக்கில் நிலுவை யில் உள்ள சம்பளத்தை உடனடி யாக வழங்கிடக் கோரி ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்தை ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் (பொறுப்பு) கண்ணப்பன் மற்றும் முன்னாள் மாவட்டச் செய லாளர் பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினார். இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலு, ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி கோவிந்தராஜன், மாநில அமைப்புச் செயலாளர் செல்வராஜன் மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சையத் இத்ரீஸ் ஆகி யோர் சிறப்புரையாற்றினார். முடி வில் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட அமைப்புச் செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.