திருப்பூர், ஜன.11- அயலகத் தமிழர் தினத்தை முன் னிட்டு, சென்னையில் நடைபெற்று வரும் அயலகத் தமிழர் தினம் 2024 தொடக்க விழா நிகழ்ச்சியை பொது மக்கள் பார்வையிடும் வகையில் அதி நவீன மின்னணு வாகனத்தின் மூலம் திருப்பூரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்து. இதை மாவட்ட ஆட்சித்த லைவர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் மாந கராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர்ஆகியோர் விழானன்று திருப்பூர் மாநகராட்சி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் பார்வையிட்டனர். அயலகத் தமிழர்களின் நலன் காக்க ஒவ்வொரு ஆண்டும் அயலகத் தமிழர் தினம் தமிழ் நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ”தமிழ் வெல் லும்” என்ற கருப்பொருளை மைய மாக கொண்டு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் சென்னை, நந்தம்பாக் கம், வர்த்தக மையத்தில் அயலகத் தமி ழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் - 2024 தொடக்க விழாவில் இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அமைக்கப் பட்டிருந்த கண்காட்சியினைப் பார்வை யிட்டு விழாவினை தொடங்கி வைத்தார். இவ்விழாவினை திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட் டதை திருப்பூர் மாநகராட்சி, முத்தமிழ றிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம், சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாண வியர்கள் பார்வையிட்டார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில் அயலகத் தமிழர் தினம் 2024 தொடக்க விழா நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பை மாவட்ட ஆட்சி யர் பார்வையிட்டார்.