சேலம், ஏப்.11- சேலம் புதுரோட்டில் செங்கல் சூளை தொழிலாளர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், புதுரோட்டை அடுத்த மல்லமூப்பம்பட்டி பகுதியில் செங்கல் சூளை கள் உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூலி வேலை செய்து வரு கின்றன. இந்நிலையில், திங்களன்று மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள், செங்கல் சூளை களில் மின்சாரத்தை துண்டித்ததாக கூறப் படுகிறது. இதனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இத னால் ஆவேசமடைந்த தொழிலாளர்கள் திங்களன்று இரவு புதுரோடு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சேலம் மேற்கு சரக காவல் உதவி ஆணையர் நிலவழகன் மற்றும் காவல் ஆய்வாளர் (குற்ற பிரிவு) கந்தவேல் உள் ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது செங்கல் சூளை தொழிலாளி பூவரசன் என்பவர் உட லில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத் தினர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இப் போராட்டத்தால் புதுரோடு பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத் தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.