நாமக்கல், மார்ச் 24- தூத்துக்குடியில் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் களை தாக்கியதை கண்டித்து மோகனூரில் ஜாக்டோ – ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கீழநம்பிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குள் புகுந்து 2 ஆம் வகுப்பு மாணவனின் உறவினர்கள், தலைமை ஆசிரியை குருவம்மாள், இடை நிலை ஆசிரியர் பரத் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதை கண்டித்து மோகனூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ டிக்கை குழு, ஜாக்டோ - ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சரவணன் தலைமை ஏற்றார். தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அருள் முருகன் வரவேற்றார். இதில், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் கணேசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் மாதேஸ்வரன் உட்பட திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.