திருப்பூர், ஜூன் 12- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கிளை மாநாடு மற்றும் கிளை அமைப்பு கூட்டம் கொடிங்கியம் ரத்தினசாமி தோட்டத் தில் நடைபெற்றது. கிளை மாநாட்டிற்கு ரத்தினசாமி தலைமை தாங்கினார். கிளை மாநாட்டை விளக்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உடுமலைப்பேட்டை ஒன்றிய தலைவர் ஏ.ராஜகோபால் பேசி னார். பின்பு கொடிங்கியம் மற்றும் பொன்னாலம்மன் சோலை கிளைகள் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். கொடிங்கியம் கிளை தலைவர் பிரபு ராம், துணைத் தலைவர் காளிமுத்து,செயலாளர் காமராஜ், பொரு ளாளர் தமிழ் தென்றல் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய் யப்பட்டனர். பொன்னாலம்மன் சோலை கிளை தலைவர் தேவராஜ், செயலாளர் திருமலைசாமி, பொருளாளர் ஆனந்தகுமார் ஆகியோர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளை மாநாட்டில் மாடலோகேஸ்வரன் நன்றி கூறினார். கிளை மாநாட்டில் கொடிங்கியம் மற்றும் பொன்னாலம்மன் சோலை விவசாயிகள் கலந்து கொண்டனர்.