திருப்பூர், நவ. 6 – பல்லடம் அருகே உள்ள அனுப் பட்டி கிராமத்தில் செயல்படும் இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி அந்த வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமையில் பல்லடம் வட்டாட்சி யர் அலுவலகத்தின் முன்பாக கோபா வேசமாக அணி திரண்டனர். பல்லடம் வட்டம், அனுப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக கண்ணப்பன் ஸ்டீல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேற்றப்படும் புகை மற்றும் நச்சுக் கழிவுகளால் தோல் நோய், சுவாசக் கோளாறு, புற்று நோய் உள் பட பலவித பாதிப்புகள் ஏற்படுவதாக இந்த வட்டார பொது மக்கள் குற்றஞ் சாட்டினர். எனவே இந்த ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆலையை மேலும் விரிவாக்கம் செய்யப் போவதாக ஆலை நிர்வாகம் தெரிவித்தது. இது பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை யும், கோபாவேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே கண்ணப்பன் அயர்ன் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யக் கூடாது, தற் போது செயல்படும் உருக்காலையை யும் இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள னர். இக்கோரிக்கையை வலியுறுத்தி கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலை மையில் பல்லடம் வட்டாட்சியர் அலு வலகத்தை முற்றுகையிடும் போராட் டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதனன்று அனுப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 1000 பேர் அணிதிரண்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந் தனர்.
பல்லடம் வட்டாட்சியர் அலுவல கத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவ லக நுழைவாயிலை அடைத்து பாது காப்பு அரணாக நின்றிருந்தனர். மேலும் காவல் துறை மற்றும் தீய ணைப்பு மீட்புப் படை வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலை மையில் காவலர்கள் குவிக்கப்பட்டி ருந்தனர். பொதுமக்கள் சார்பில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., உழவர் உழைப்பா ளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தி யமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், அனுப்பட்டி ராமசாமி, திமுக ஒன்றியச் செயலாளர் கிருஷ் ணமூர்த்தி உள்ளிட்டோர் வட்டாட்சி யர் அலுவலகத்திற்குள் சென்று அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர். திருப்பூர் வருவாய் கோட்டாட்சி யர் கவிதா, வட்டாட்சியர் சிவசுப்பிர மணியம், காவல் துணைக் கண் காணிப்பாளர் எஸ்.முருகவேல் ஆகி யோரிடம் மக்களது கோரிக்கை குறித்து தெரிவித்தனர். குறிப்பாக கடந்த 10 ஆண்டு காலமாக அனுப் பட்டியில் உள்ள இரும்பாலையால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவது குறித்து முறையிட்டபோதும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் அந்த ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி யர் உள்பட அதிகாரிகள் பங்கேற்கின் றனர். அரசு யாருக்கு ஆதரவாக இருக் கிறது என்று கேள்வி எழுப்பினர். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆலைக்கு எதிராக மக்கள் முழுஎதிர்ப் பைப் பதிவு செய்தபோதும், அது பற்றி அரசுத் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை. ஆலை விரிவாக் கத்திற்கு அனுமதி தரக்கூடாது, மக்க ளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆலையை தற்காலிகமாக மூடுவதாக எழுத்துப் பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என கோரினர்.
இதற்கு பதிலளித்த கோட்டாட்சி யர் கவிதா, இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், மக்களின் கருத்தை முழுமையாக பதிவு செய்து அறிக்கை அனுப்பும்படியும், இங்குள்ள நிலவரம் குறித்து மாநில தொழில்துறைச் செயலருக்கு அறிக்கை அனுப்புவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் என்றும், ஆலை விரிவாக்கத்திற்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை என்றும் கோட்டாட்சியர் கவிதா கூறினார். மேலும் இந்த விபரங்களை நேரடியாக மக்களிடம் தெரிவிக்கும் படி தலைவர்கள் அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து வட்டாட்சியர் சிவசுப்பிரணியம், துணைக் கண் காணிப்பாளர் முருகவேல் ஆகியோர் வெளியே வந்து அங்கு திரண்டிருந்த மக்களிடம் விபரங்களை தெரிவித்த னர். இதைக் கேட்ட மக்கள், பிரச்ச னைக்குத் தீர்வு காணும் வரை ஆலை யைத் தற்காலிகமாக மூடிவைக்க வேண்டும். அந்த ஆலை நிர்வாகம் தற்போதும் விரிவாக்கப் பணியைச் செய்து வருகிறது. எனவேநிரந்தரமாக மூட வேண்டும். அரசு அதிகாரிகள் அனுப்பட்டி கிராமத்திற்கு வந்தால் மௌன விரதம் போல் மக்களிடம் எதுவும் பேசாமல் போவது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவாதத்தை ஏற்று கலைந்து செல்வதாகவும், ஆலை மீது நடவ டிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக் கட்ட போராட்டத்தை வலுவாக நடத்து வோம் என்றும் கூறி மக்கள் கலைந்து சென்றனர்.