கோவை, ஏப்.18 – சாலை விரிவாக்கம் என்கிற பெய ரில் வெறும் 6 கிலோ மீட்டர் தூரத்தை மிச்சப்படுத்த 2 ஆயிரத்து 800 ஏக்கர் பாசன நிலங்களை அழிக்க முற்படும் ஒன்றிய, மாநில அரசின் நடவடிக் கையை ஒருபோதும் அனுமதிக்க முடி யாது என விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் ஆவேசமாக தெரிவித்தார். கோவை மாவட்டம், குரும்பபா ளையம் முதல் சத்தியமங்கலம் வரை யிலான புறவழி பசுமை சாலை அமைப் பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 800 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப் படுகிறது. இதேபோன்று, கரூர் முதல் கோவை வரை 6 வழி பசுமை சாலை மற்றும் அதையொட்டி கோவை கிழக்கு புறவழிச்சாலை 2,400 கோடி ரூபாய் செலவில் அமைக்க முடிவு செய்யப் பட்டு திட்ட அறிக்கை நிலையில் உள் ளது. இத்திட்டத்தினால் 2,800 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப் படுகிறது. விவசாயிகள், பொதுமக்க ளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவு விளை நிலங்களை அழித்து,
இத்திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசு கள் முயற்சி செய்வதை கண்டித்தும், ஏற்கனவே உள்ள சாலைகளை தேவை யான அளவு விரிவாக்கம் செய்யக் கோரியும் கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் துவக்கி வைத்து பேசுகையில், ஒன்றிய அரசு கொண்டு வருகிற திட்டங் கள் பெரும்பாலும் மக்களுக்கு விரோ தமான திட்டங்களாகவே இருக்கிறது. இது தவறு என பேசினால், நீங்கள் வளர்ச்சிக்கு எதிராக உள்ளீர்கள் என் கின்றனர். எங்கள் கேள்வி எல்லாம் உங் களின் வளர்ச்சிக்கெல்லாம் விவசாயி கள் மட்டும் தான் தியாகம் செய்ய வேண்டுமா என்பதே. பெட்ரோல் குழாய் பதிக்க, மின்சார கேபிள் கொண்டு செல்ல, கெயில் குழாய் பதிக்க என தொடர்ந்து விவசாயிகள் நிலம் கொடுத்தார்கள். இப்போது கூட உயர் அழுத்த மின்சார கேபிள்கள் கொண்டு செல்ல நிலம் கொடுத்துள் ளார்கள். தேசத்தின் மொத்த வளர்ச் சிக்கும் விவாசயிகள் மட்டும்தான் தியா கம் செய்ய வேண்டுமா,
இதர துறைகள் தியாகம் செய்யாதா என்பதே கேள்வி. இப்போது இங்கு நடைபெறும் இயக் கங்கள்கூட சாலை விரிவாக்கத்திற்கு ஏராளமான மாற்று திட்டங்கள் இருக் கும் நிலையில், அதனை விடுத்து ஆயி ரக்கணக்கான ஏக்கர் விவசாயிகளின் பாசன நிலங்களை அழிப்பதற்கு எதி ராகத்தான் இந்த போராட்டங்கள் நடை பெறுகிறது. ஒன்றிய அரசின் சார்பில், கரூர் - கோவை பைபாஸ் சாலை போடுவ தற்கு 2800 ஏக்கர் பாசன நிலங்களை கையகப்படுத்துவோம் என்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். நாங்கள் இந்த திட்டத்தினால் என்ன பயன் என் பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியபோது, தேசிய நெடுஞ் சாலை துறையின் பொறியாளர்கள் அதிகாரிகள் ஆய்வு செய்து கொடுத்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெறும் 6 கிலோ மீட்டர் தூரம் தான் மிச்சமா கும் என்பது தெளிவாகுகிறது. இதற் கான அதிகாரப்பூர்வமாக கடிதமும் உள்ளது. வெறும் 6 கிலோ மீட்டர் தூரம் மிச்சப்படுத்துவதற்கு 2 ஆயி ரத்து 800 ஏக்கர் பாசன நிலங்களை அழிப்பதை ஒருபோதும் ஏற்க முடி யாது. இதேபோல், அன்னூர் - சத்திய மங்கலம் சாலை விரிவாக்கத்திற்கு புதிய பைபாஸ் சாலை அமைக்க 800 ஏக்கர் நிலம் எடுப்பதற்கு முடிவெடுக் கிறார்கள். இதுதேவையில்லாத ஒன்று. ஏற்கனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்தும், போக்கு வரத்து நெரிசல் உள்ள பகுதிகளான அன்னூர், புளியம்பட்டி, சக்தியமங்க லம் ஆகிய இடங்களில் மேம்பாலங் களை கட்டினாலே போதுமானது. வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும். இதற்கான சாத்தியக்கூறு களை ஆராய்ந்தே இந்த ஆலோச னையை முன்வைக்கிறோம்.
இதனை விடுத்து, விவசாயிகள் தியாகம் செய்ய வேண்டும் என பேசிக் கொண்டிருந் தால் ஒருபோதும் ஏற்கமுடியாது. கோவை மாவட்ட ஆட்சியர், நெடுஞ் சாலை துறை அமைச்சர் ஆகியோரு டன் தொடர்ந்து இதுகுறித்து விளக்கி வருகிறோம். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள் கிறோம். இதுகுறித்து, நாடாளுமன்றத் திலும் தொடர்ந்து குரல் எழுப்பியுள் ளேன். மக்கள் மன்றத்திலும் குரல் கொடுத்து வருகிறோம். ஆகவே, விவ சாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சியும், கோவை மக்க ளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பி னரான நானும் எப்போதும் உங்களு டன் நிற்பேன், என்றார். முன்னதாக, கோவை மண்டல விவ சாய சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உழ வர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் கே.செல்லமுத்து, தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் தங்க ராஜ், தமிழக விவசாயிகள் பாது காப்புக்குழுவின் நிறுவனர் வழக்கறி ஞர் ஈசன், கொங்கு மண்டல விவசாயி கள் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப் பாளர் வி.பழனிச்சாமி, கொங்கு மண் டல விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.முருகசாமி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி உள் ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.