சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவன் கைது
கோவை, மே 9- கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் போலீசரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது, எனது கணவர் ஓட்டு நராக உள்ளார். எங்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். சம்பவத்தன்று எனது 3 வயது மகள் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது எங்களது வீட்டின் அருகே வசிக்கும் 16 வயது சிறுவன், எனது மகளை அவரது வீட்டிற்கு அழைத்து சென் றுள்ளார். அங்கு வைத்து அவர் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். எனது மகள் கூச்சலிடவே சிறுவன் அங்கு இருந்து தப்பிச் சென்றார். எனது மகள் அழுத படியே வீட்டிற்கு வந்தார். என்ன நடந்தது என்று கேட்ட போது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித் திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவனை, போக்சோ சட்டத் தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறுவர் சீர் திருத்தப்பள்ளியில் அடைத்தனர். பெண்ணுக்கு பாலியல் தொல்லை கோவை மாவட்டம், நெகமத்தை சேர்ந்த 35 வயது பெண் நெகமம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் கட்டட வேலை செய்து வருகிறேன். எனக்கு திரு மணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். எனது ஊரைச் சேர்ந்த விஜயன் (45) என்பவருடன் கட்டட வேலைக்கு சென்று வருகிறேன். வேலை செய்து இடத்தில் வைத்து அவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று நான் சம்பள பணம் வாங்குவதற்காக விஜயனின் வீட்டிற்கு சென்றேன். அப்போது அங்கு இருந்த அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இதில், அதிர்ச்சியடைந்த நான் சத்தம் போட்டேன். அப்போது நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக என்னை மிரட்டினார். எனவே, எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த விஜயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
தாமதமின்றி ஊதியம் வழங்கு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை
ஈரோடு, மே 9- ஈரோடு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட் டத்தில் சுமார் 250 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ.4500 வழங்கப் படுகிற நிலையில், மாவட்டம் முழுவதும் பணியாற்றுபவர் களுக்கு 2 முதல் 4 மாதங்கள் வரை ஊதியம் வழங்கப் படாமல் உள்ளது. எனவே, காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும். பணி நேரத்தை வரன்முறை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மக்களை தேடி மருத்து வதிட்ட பணி யாளர்கள் மனு அளித்தனர்.
அடிப்படை வசதிகளைக்கூட நிறைவேற்றவில்லை ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய பொதுமக்கள்
தருமபுரி, மே 9- அடிப்படை வசதிகளை ஏற் படுத்தி தராத சுங்கரஅள்ளி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சுங்கரஅள்ளி ஊராட்சியில் அடிப் படை வசதிகள் செய்து கொடுக் காமல் இருந்துள்ளதாக கூறப்படு கிறது. இதுகுறித்து ஏற்கனவே கடந்த மே 1 ஆம் தேதியன்று நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இந்நிலையில், தொடர்ந்து கிராம சபை கூட்டங்களின் தீர்மான அடிப்படையில், எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை எனக்கூறி ஞாயி றன்று சுங்கரஅள்ளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சாவியை எடுத்துச் சென்றனர். இதையடுத்து, திங்களன்று காலையில் ஊராட்சி மன்ற பணி களை செய்ய வருகை தந்த ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், புதிய தாக போட்டிருந்த பூட்டை கண்டு அதிர்ச்சியடைந்து, வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி, கடத்தூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத் திற்கு வந்து, பூட்டு போட்ட பொது மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இத் தகவலறிந்த கடத்தூர் காவல் ஆய் வாளர் நாகலட்சுமி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத் திற்கு சென்றனர். அப்போது, சில நாட்களில் பொதுமக்களின் அடிப் படை தேவைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் முன்னி லையில், ஊராட்சி தலைவர் அளித்த உறுதியின் பேரில், சமா தானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனை யடுத்து ஊராட்சி மன்ற அலுவல கத்தின் கதவை அதிகாரிகள் திறந் தனர்.
கால்நடைகளை தாக்கும் விலங்குகள்
திருப்பூர், மே 9- மடத்துக்குளம் அருகே கால்நடைகளை தாக்கி வரும் விலங்குகளால் அப்பகுதி விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் மைவாடி, துங்காவி, தாந்தோனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து ஆடு, மாடுகளை இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத விலங்கு கள் கடித்து சேதப்படுத்தி வருவது அப்பகுதி மக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் சிசிடிவி கேமரா பொறுத்தி கண்காணித்து வருகின்றனர். எனவே, கணியூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கணியூர், கடத்தூர், ஜோத்தம்பட்டி, மெட்ராத்தி ஆகிய பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் தங்களுடைய கால்நடைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தகுந்த முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கால் நடை பராமரிப்புத்துறை சார்பில் கேட்டுக் கொள்வதாக கணியூர் கால்நடை மருந்தகம் கால்நடை உதவி மருத்து வர் தெரிவித்துள்ளார்.
உடுமலை, தாராபுரம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை
உடுமலை, மே 9- உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்குரிய இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அக்கல்லூரி வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக மே 19 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்லூரி யிலும் மாணவர்சேர்க்கை தகவல் வழிகாட்டு மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். முதலில் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண் முத லான விவரங்களை அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தான் சேரவிரும் பும் கல்லூரியைத் தேர்வு செய்து அந்தக் கல்லூரியில் உள்ள தகுதியான பாடப் பிரிவு கள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 48, பதிவுக்கட்டணம் ரூ.2 மொத்தம் ரூ.50 (ஐம்பது மட்டும்). இதனை, இணையவழியில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவின ருக்கு பதிவுக்கட்டணம் ரூ2 மட்டும் செலுத்தி னால் போதுமானது. விண்ணப்பத்தை முறை யாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தி னரின் குழந்தைகள், தேசியமாணவர்படை சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெ றும். இந்தச் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக் கீட்டில் சேர விரும்புப வர்கள் அதற்கான ஆதாரச் சான்றிதழ் நகல்களைப் பதிவேற் றம் செய்ய வேண்டும். மாவட்ட, மாநில அளவிலான சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள், விளையாட்டுப் பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம். இதைய டுத்து www.gacudpt.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில், கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்த வர்களின் தரவரிசைப்பட்டியல் மே 26 ஆம் தேதி காலை வெளியிடப்படும். மே 29 அன்று சிறப்புப் பிரிவிற்கான கலந்தாய்வுவும், மே 30 அன்று முதல் பிற பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன்2 வரை நடைபெறும், என்ற னர். தாராபுரம் இதேபோல தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பி.ஏ.தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி வேதியியல் ஆகிய 5 பாட பிரிவுகள் அடங்கிய இளங்கலை மற்றும் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு மாணவ, மாணவி கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண் ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் பதிவு செய்ய இறுதி நாள் வருகிற மே 19 ஆம் தேதி ஆகும். எனவே திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நகர, கிராம பகுதிகளில் மேல்நிலை கல்வி பயின்று முடித்த மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வியான இளநிலை பட்டப் படிப்புகளில் விண்ணப்பித்து சேர்க்கை பெற்று பயன்பெற முன்வர வேண்டும் என அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் க.பத்மாவதி தெரி வித்துள்ளார்.
25 இடங்களில் தர்ணா: மார்க்சிஸ்ட் கட்சி முடிவு
திருப்பூர், மே 9- திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்குட் பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 25 இடங்களில் மாலை நேர தர்ணா நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர் மானித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக் குழு அலுவலகத்தில் கடந்த ஞாயிறன்று ஒன் றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர் கள் கூட்டம் என்.கோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், வடக்கு பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தை தாலுகா மருத்துவமனையாக மாற்ற வேண்டும். திருப்பூர் மாநகராட்சி வர்த்தகக் கட்டிடங்களுக்கு 2017 முதல் குப்பை வரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும். குப்பை அகற்றுவதை தனியாருக்கு கொடுக்கக் கூடாது. பழுதடைந்துள்ள சாலைகளை உட னடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். அனைத்து பகுதி மக்க ளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மூன்று நாளுக்கு ஒரு முறை சீராக வழங்க வேண் டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட கிராமப்புற அரசு பேருந்து வழித்தடங்களை மீண்டும் அனைத்து பகுதிகளுக்கும் உடன டியாக இயக்க வேண்டும், கோவை - ஈரோடு வழியாக சேலம் செல்லும் பாசஞ்சர் ரயிலை கூலிபாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மே 23 ஆம் தேதி வரை 25 இடங்களில் மாலை நேர தர்ணா நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களின் பணப்பலன்கள் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
திருப்பூர், மே 9- அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் பணப்பலன் களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியா ளர்கள் சம்மேளனத்தின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் தனியார் விடுதியில் செவ்வா யன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்,போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பென் சன், அகவிலைப்படி, ஓய்வு கால பணப்பலன்களைப் பெற 8 ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட்டது, ஆனால் கடந்த 8 ஆண்டு காலமாக தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்கப் படாமல் காலம் தாழ்த்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டும். மின் வாரியம், அரசு ஊழியர்கள் போன்று அரசு போக்கு வரத்து கழக தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் பட் ஜெட்டில் பென்சன், ஓய்வு கால பணப்பயன் ஆகியவற்றிற் கான நிதி ஒதுக்கீடு செய்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போக்குவ ரத்து கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொருளா ளர் குணசேகரன் இதைத் தெரிவித்தார்.
சிபிஎம் தாலுகா செயலாளர் மீதான பொய் வழக்கு தள்ளுபடி
13 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு நீதிமன்ற தீர்ப்பு
தாராபுரம், மே 9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாரா புரம் தாலூகா செயலாளர் என்.கனகராஜ் மீது போடப்பட்ட பொய்வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது. 13 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2010 ஆண்டு மாற்றுக்கட்சியை சேர்ந்த ரகுபதி என்பவர் தாராபுரம் பகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மீது வேண்டு மென்றே, வேறு போஸ்டர்களை ஒட்டுவதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். இது குறித்து தாராபுரம் காவல் நிலையத்தில் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம்தேதி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் கனக ராஜ் புகார் செய்தார். இதனையடுத்து, புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ரகுபதியிடம் போலீசார் விசாரணை நடத்தி, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவு றுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் என்.கனகராஜ் மீது, தாராபுரம் காவல் நிலையத்தில் ரகுபதி புகார் அளித்துள்ளார். என் கையை வெட்டி விடுவேன் என மிரட்டியதாக பொய்யான புகாரை அளித்தார். புகாரின்பேரில் அன்று பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கவிதா எந்த விசாரணையுமின்றி எப்ஐஆர் எண் 142 / 10 பதிவு செய்து 506 (1) என்ற சட்டப்பிரிவின் கீழ் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்விரோதம் காரண மாக பொய்யான புகாரை அளிக்கிறார், உரிய விசாரணை நடத்துங்கள் என தெரிவித்தும், காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய் தார். இதனையடுத்து, புகார் அளிக்கப்பட்டு ஆறு மாதத்திற்கு பிறகு, தாராபுரம் குற்ற வியல் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பினர்.அந்த வழக்கை முறையாக எதிர்கொண்டார். இந்த வழக்கின் தீர்ப்பு திங்களன்று தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்தது. இதில், கனகராஜ் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தாரா புரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் கூறுகையில், காவல்துறையும், ரகுபதியும் இணைந்து செய்த சதிச்செயல் 13 ஆண்டு களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. மக்க ளின் கோரிக்கைகளுக்காக களத்தில் இயங் கும் கம்யூனிஸ்ட்டுகளை வழக்கு போன்றவற் றால் அச்சுறுத்தி முடக்க முடியாது என்பதை 13 ஆண்டு சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகாவது, பொய்வழக்கு போடும் போலீ சாரும், எதிரிகளும் புரிந்து கொள்ள வேண் டும். இந்த வழக்கு வெற்றியடைய காரண மாக இருந்த மூத்த வழக்கறிஞர் நடராஜ் மற் றும் சேகர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்ப தாக கூறினார்.
வேலை, வருவாய் இல்லாத விரக்தி தம்பதினர் தற்கொலை முயற்சி
கோவை, மே 9- வேலையும், வருவாயும் இல்லாத நிலையில், கோவை அருகே 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்த தம்பதி யினர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள ஓரைக் கால்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்தசாமி (28). இவரது மனைவி சந்தியா (25). இவர்கள் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக அரவிந்தசாமி வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால், அன்றாட செல விற்கு வருவாய் இல்லாமல் தவித்துள்ளனர். இந்நிலையில், சந்தியா தனது கணவரை மாதம்பட்டியில் உள்ள தனது பெற் றோர் வீட்டிற்கு சென்று வரலாம் என அழைத்துள்ளார். இதற்கு அரவிந்தசாமி தற்போது கையில் பணம் இல்லை, ஆகவே செல்ல வேண்டாம் என மறுத்துள்ளார். இதனால் இருவருக் குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தியில் இருந்த அரவிந்தசாமி விஷம் குடிக்க, இதைக்கண்ட சந்தியாவும் விஷத்தை குடித்துள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அர விந்தசாமி, சந்தியாவும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பேருந்தில் திடீரென வெளியேறிய புகை
பயணிகள் ஓட்டம்
கோவை, மே 9- கோவை அருகில் ஓடும் பேருந்திலிருந்து வெளியேறிய புகையால் பயணிகள் அலறியடித்து ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவையில் இருந்து அன்னூர் வழியாக சத்தியமங்கலத்துக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செவ்வாயன்று தனியார் பேருந்து வழக்கம் போல பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பசூர் அருகே பேருந்து வந்தபோது, எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறி பேருந்து முழுவதும் பரவியது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்த, பயணிகள் அலறியடித்தவாறு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். பேருந்தில் இருந்து வெளியேறிய புகை சாலை முழுவதும் பரவி புகைமண்டலமாக காட்சியளித்து. இதையடுத்து மாற்று பேருந்து மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்தில் புகை வெளியேறியதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவி வருகிறது. ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட் ஆயில் குறைந்தால் இஞ்சின் வெப்பமடைந்து புகை வெளியேறியுள்ளதாக பேருந்து பழுது நீக்கும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கீழ்பவானி முறை பாசன விவசாயிகள் கோரிக்கை ஏற்பு
ஈரோடு, மே 9- கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயி கள், செயற்பொறியாளருடனான பேச்சு வார்த்தையில் கோரிக்கை ஏற்கப்பட்டதால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்ற ஆணைக்கு இணங்க அர சாணை எண் 276 படி சீரமைப்பு வேலைகள் செய்யப்பட வேண்டும் என கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் கீழ்பவானி அயக்கட்டு நில உரிமையாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் அறி வித்திருந்தனர். அதன்படி, சங்கத்தின் மூத்த நிர்வாகி என்ஜினீயர் ஏ.ராமசாமி தலைமை யில் ஈரோடு, வெண்டிபாளையத்தில் உள்ள கீழ் பவானி வடிநிலக்கோட்ட நீர்வளத்துறை அலு வலகம் முன்பு ஞாயிறன்று விவசாயிகள் கூடி னர். இப்போராட்டத்திற்கு, காவல்துறையி னர் அனுமதி மறுத்தனர். மேலும், காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியிருந் தனர். இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் சம் பவ இடத்தில் கூடி கோரிக்கையை வலியு றுத்தி முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், செயற்பொறியாளர் அலுவலகத்தினுள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், கீழ்பவானி வாய்க்காலில் திட்டமிட் டப்பட்டபடி பணிகள் நடைபெறும் என செயற் பொறியாளர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக, விவசாய சங்கங்களின் நிர் வாகிகள் கி.வே.பொன்னையன், ஈஸ்வர மூர்த்தி, பெரியசாமி, சுப்பு உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். திமுக முன்னாள் ஒன்றிய அமைச் சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்எல் ஏவும், காங்கிரஸ் நிர்வாகியுமான ஆர்.எம்.பழனிச்சாமி ஆகியோரும் வந்திருந்தனர்.
ஊராட்சி நிர்வாகத்திற்கு வாட்ஸ் அப் குழு வேண்டும்
வார்டு உறுப்பினர்கள் போராட்டம்
சூலூர், மே 9- சூலூர் அருகே பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக போர் கொடி தூக் கிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி நிர் வாகத்திற்கு என வாட்ஸ் அப் குழு அமைப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள செலக்கரிசல் ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் சுமார் 6 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இந்த ஊராட்சிக்கு மரகத வடிவு என்ற பெண், தலைவராக இருந்து வரு கிறார். இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த 5 ஊராட்சி வார்டு உறுப்பினர் கள், ஊராட்சி நிர்வாகத்தின் செயல் பாடுகளில் முறைகேடுகள் நடைபெறு கிறது எனவும், ஊராட்சி மன்ற தலை வர் தங்களை மதிப்பதில்லை எனவும் கூறி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஊராட்சி மன்ற கூட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வந்தனர். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த அதிருப்தி வார்டு உறுப்பினர்கள் 5 பேரும், செவ்வா யன்று திடீரென ஊராட்சி மன்ற அலு வலகத்தில் உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்த கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் மரகத வடிவுக்கு ஆதரவாக ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்த தகவலின் பெயரில் சூலூர் போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது திமுக வைச் சேர்ந்த அதிருப்தி வார்டு உறுப்பி னர்கள் ஊராட்சி நிர்வாகம் வெளிப்படை யாக செயல்பட வேண்டும் எனவும், அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தலை மையில் வார்டு உறுப்பினர்கள் அடங் கிய வாட்ஸ்அப் குழு ஒன்று அமைக் கப்பட வேண்டும். அதில் நிர்வாக செயல் பாடுகள் குறித்த தகவல்கள் அனைத் தும் பகிரப்பட வேண்டும் என வலியுறுத் தினர். ஊராட்சி மன்ற தலைவர் தரப்பில் செலக்கரிசல் ஊராட்சி நிர்வாகத்துக்கு என வாட்ஸ்அப் குழு உருவாக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
ராசிபுரம் பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர்
நாமக்கல், மே 9- ராசிபுரத்தில் சுமார் ஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்த கன மழையால், புதிய பேருந்து நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந் தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களான மெட்டாலா, திம்மநாயக்கன்பட்டி, குருசாமிபாளை யம் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் தொடர்ந்து 3 ஆவது நாளாக கனமழை பெய்தது. காலையில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், மாலையில் திடீரென கருமேகங் கள் சூழ்ந்து ராசிபுரம் பகுதியில் கனமழை பெய்ய துவங்கி யது. தொடர் மழை காரணமாக ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் மற் றும் கழிவுநீர், வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகினர். அதேபோல் புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி யதால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை முயற்சி
தருமபுரி, மே 9- பென்னாகரம் அருகே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால், மாணவி ஒருவர் தற் கொலைக்கு முயன்றுள்ளார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சென் னப்பநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர், 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், திங்களன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மாணவி தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளதாக தெரியவந்தது. இதனால் மன முடைந்து வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அவரது குடும் பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருநங்கை எரித்து கொலை?
கோவை, மே 9- கோவை, காந்திபுரம் பகு தியில் தனியாருக்கு சொந்த மான காலி இடத்தில் திங்க ளன்று எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கண்டறி யப்பட்டது. பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீ சார், உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அது கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணங் களா? என்ற அடிப்படையில் விசாரணை துவங்கப்பட் டது. ரத்தினபுரி காவல்துறை யினர் இது சம்பந்தமாக விசா ரணை மேற்கொண்டுள்ள னர். இதில், உயிரிழந்த திரு நங்கை அதேபகுதியைச் சேர்ந்த அபிராமி என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.