districts

img

ஈரோட்டில் புத்தக கண்காட்சி

ஈரோடு, ஜன.1- ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் புத்தக கண் காட்சி நடைபெற்று வருகிறது. நேசனல் புக் டிரஸ்ட் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 37ஆவது தேசிய புத்தக கண்காட்சி  ஈரோட்டில் அண்மையில் தொடங்கியது. மாநகராட்சி மேயர்  சு.நாகரத்தினம் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இக்கண் காட்சி ஆங்கில புத்தாண்டு தினத்தன்றும் நடைபெற்றது. இதில் ஆர்வமாக வாசகர்கள் வந்து பார்வையிட்டு, புத்த கங்களை வாங்கி சென்றனர். பிரப் சாலை, வணிகவரி அலு வலகம் முன்பு அமைந்துள்ள இக்கண்காட்சி அடுத்த ஓரிரு மாதங்கள் நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரி வித்தனர்.