districts

img

பனியன் தொழிலாளர்களுக்கு போனஸ்: திருப்பூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 27 – திருப்பூரில் வேலை செய்யும் பனி யன் தொழிலாளர்களுக்கு கடந்த  ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வலியுறுத்தி சிஐடியு  பனியன் பொதுத் தொழிலாளர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் புதிய பேருந்து நிலை யம் முன்பாக வெள்ளியன்று இந்த ஆர்ப்பாட்டம் சங்க நிர்வாகி எம்.பாண்டியராஜன் தலைமையில் நடை பெற்றது. இதில் மிகக் கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்ச னைகளால் பனியன் தொழிலாளர் கள் தங்களது அத்தியாவசிய தேவை களை பூர்த்தி செய்து கொள்ள முடி யாத அளவு நெருக்கடியில் உள்ள னர். எனவே பண்டிகை கால தேவை களை ஓரளவாவது நிறைவேற்றக் கூடிய முறையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலான போனஸ் வழங்க வேண்டும். மேலும் பீஸ் ரேட் மற்றும் காண்ட்ராக்ட் முறையில்  வேலை செய்யும் தொழிலாளர்க ளுக்கு வேலை செய்த நாட்களுக் கேற்ப போனஸ் சட்டப்படி சதவீத அடிப்படையில் போனஸ் வழங்க, முதன்மை வேலை அளிப்பவரான கம்பெனி நிர்வாகங்கள் உறுதிப்ப டுத்த வேண்டும். போனஸ் தொகையை தீபாவளிக்கு 15 நாட்க ளுக்கு முன்னதாக வழங்க வேண் டும் என வலியுறுத்தி சங்கப் பொதுச்  செயலாளர் ஜி.சம்பத், சிஐடியு கட்டு மானத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் டி.குமார், மாவட் டத் துணைத் தலைவர் பி.பாலன், பனி யன் சங்க நிர்வாகி சஜினா ஆகியோர்  உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் சங்க நிர்வாகிகள் துரைமுருகன், மாணிக்கம், ராஜேஷ், சின்னசாமி உள்பட பனியன் தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.