துணிநூல் துறை ஊழியர்களுக்கு போனஸ்
ஈரோடு, நவ. 7- ஈரோடு, பவானி சாலையில், தமிழ்நாடு கூட்டுறவு துணி நுால் பதனிடும் ஆலை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப் பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கான இல வச சீருடை திட்டத்தில் துணிகளை பதனிடும் பணியை இந்த ஆ லை செய்து வருகிறது. கேரளா அரசின் சீருடை திட்டம், கோ ஆப்டெக்ஸ், தேசிய பஞ்சாலை கழகம், தமிழ்நாடு பஞ்சாலை கழகம், கோவை மத்திய சிறை, காதி கிராமத் தொழில் வாரியம், கேரளா மாநில கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்க நிறுவனங்களின் உற்பத்தி துணிகளும் பதனிடப் படுகிறது. உதவி இயக்குனர் தமிழ்செல்வன் முன்னி லையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கினார். இந்த ஆலையில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு, 8.33 விழுக்காடு போனஸ், கருணை தொகை, 11.67 என 20 விழுக் காடு போனஸ் வழங்கப்பட்டது.
கூடுதல் தொழிலாளர் ஆணையர் நியமனம்
கோவை, நவ.7- கோவை மண்டல தொழிலாளர் ஆணையரகம் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையரகத்தின் கூடுதல் தொழிலாளர் ஆணையராக தமிழரசி பணிபுரிந்து வந்தார். இதனிடையே அவர் சென்னைக்கு பணியிடமாற்றம் செய் யப்பட்டார். சென்னை மண்டலத்தில் கூடுதல் தொழிலாளர் ஆணையராக சாந்தி நியமிக்கப்பட்ட நிலையில், செவ்வா யன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு வந்த அவர், கோப்புகளில் கையெழுத் திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
பழைய குற்றவாளிகள் வீடுகளில் போலீசார் ஆய்வு
கோவை, நவ.7- தீபாவளி சமயத்தில் எவ்வித குற்ற சம்பவங் களும் நடக்க கூடாது என்பதற்காக பழைய குற்றவாளிகள் வீடுகளில், ஆய்வு மேற் கொள்ள கோவை மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்படி குமாரபாளை யம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர்கள் குழு, காவேரி நகர், காந்தியடிகள் தெரு, அய்யம்பாளையம் உள் ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட னர். ஆய்வில், கொலை, கொள்ளை மற்றும் இதர முக்கிய வழக்குகளில் சிக்கிய முன் னாள் குற்றவாளிகள் 16 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று, அறிவுரை வழங்கினர்.
ரூ.1 கூடுதலாக வசூலிப்பு: ரூ.5000 அபராதம் விதித்து உத்தரவு
நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி நாமக்கல், நவ.7- பேருந்து பயணசீட்டுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் கட்டணம் வசூலித்ததாக வழக்கு தொடர்ந்த நபருக்கு, ரூபாய் ஐந்தாயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சீதாராம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (56). இவர், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருச்செங்கோட்டில் இருந்து எடப்பாடி வரை அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இதற்கு பேருந்து நடத்துனர் ரூ.17 கட்டண மாக வசூலித்துள்ளார். ரூ 16 மட்டுமே கட்ட ணம் வசூலிக்க வேண்டும் என்று பாலசுப்ரமணியம் கூறியும், அதனை நடத்து னர் ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து, கூடு தலாக வசூல் செய்யப்பட்ட ஒரு ரூபாயும், தமக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப் பீடையும் வழங்குமாறு கடந்த 2019 ஆம் ஆண்டு பாலசுப்பிரமணியன் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு செவ்வாயன்று, நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், பயணியிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்தது நேர்மையற்ற செயல் என தெரி வித்த நீதிபதிகள், வழக்கு தாக்கல் செய்த வருக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்ட ணம் ஒரு ரூபாயையும், மன உளைச்சலுக்கு இழப்பீடாகவும், வழக்கின் செலவு தொகை யாகவும் ஐந்தாயிரம் ரூபாயை நான்கு வார காலத்திற்குள் அரசு போக்குவரத்து நிறுவ னம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டனர்.
சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தல்
தருமபுரி, நவ.7- சர்வீஸ் சாலை இல்லாததால், 3 கிராம மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட கட மடை, எர்ரனஅள்ளி, கிருஷ்ணன் கொட்டாய் ஆகிய கிராம மக்கள் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித் தனர். அம்மனுவில், கர்நாடகா மாநிலம், நெரலூருவிலி ருந்து தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தருமபுரி - பாலக்கோடு சாலையில் உள்ள கட மடை கிராமத்தில் சர்வீஸ் சாலை அமைக்க கையப்ப டுத்திய இடங்களில், நெடுஞ்சாலை துறையினர் தற்போது மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை செய்து வருகி்ன் றனர். சர்வீஸ் சாலை அமைக்காவிட்டால் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகளை கொண்டு செல்லவும், விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாது. அதேபோல 3 கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் வெளி யூர் வந்து செல்லவும், பள்ளி கல்லூரி மாணவ, மாண விகளும் வந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டு வருகி றது. எனவே, சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் அமைப் பதை கைவிட்டு, தார்ச்சாலை அமைத்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மழை காலத்தில் மின்விபத்துகள்: பொதுமக்கள் தவிர்க்க வேண்டியது!
திருப்பூர், நவ.7- திருப்பூர் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மின் விபத்துக்களை தவிர்ப்ப தற்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் தென்பட்டால், பொதுமக்கள் அருகில் செல்லக்கூடாது. மின் கம்பி தண்ணீரில் கிடந்தால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். இதுகுறித்து அரு கில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் சாதனங்கள் மழை நீரில் மூழ்கி னால், உடனடியாக மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். ஈரக் கையால் அல்லது வெறும் காலுடன் மின்சாரம் சார்ந்த எதை யும் தொடக்கூடாது. மின்னல் மற்றும் இடியின்போது டி.வி., கம்ப்யூட்டர், மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இடி, மின்னலின்போது மின்மாற்றிகள், மின்கம்பங் கள், மரங்கள், உலோகக்கம்பி வேலிகள், திறந்த நிலையி லுள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்கக் கூடாது. சார்ட் சர்க்யூட் பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட் டால் உடனடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இயக்கும்போது உலர்ந்த, ரப்பர் பாய்களின் மீது நிற்க வேண்டும். துணிகளை உலர வைக்க மின் இழுவை கம்பிகள் மற்றும் மின்கம்பங்களை தாங் கிகளாக பயன்படுத்த கூடாது. மேலும் மின் விபத்துக்கள் குறித்து ‘மின்னகம்’ 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
நவ.17 தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கம்
திருப்பூர், நவ.7- கோவை தொழில் நுட்ப ஜவுளி கருத்தரங்கத்தின் இரண் டாம் பதிப்பு நவ.17 ஆம் தேதி ஹோட்டல் லீமெரிடியனில் நடை பெற உள்ளது. இந்தியாவின் துணிநூல் மற்றும் ஆயத்த ஆடைகள் சந் தையில் தொழில் நுட்ப ஜவுளிகள் 13 சதவீதம் பங்களிப்பு வழங்குகின்றன. தொழில் நுட்ப ஜவுளித்துறை ஆண்டிற்கு 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்றும், 2030ஆம் ஆண்டிற்குள் சந்தை மதிப்பில் 45 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது நாட்டில் தொழில்நுட்ப ஜவுளித்துறை நேரடியாக 12 லட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 50 லட்சம் நபர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. நவ.17ஆம் தேதி கோவை ஹோட்டல் லீமெரிடியனில் தமிழ்நாடு அரசின் துணி நூல் துறை, ஒன்றிய அரசின் ஜவுளித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை இணைந்து தொழில் நுட்ப ஜவுளி கருத்தரங்கத்தின் இரண்டாம் பதிப்பை நடத்து கின்றனர். இக்கருத்தரங்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்கள் தொழில்நுட்ப ஜவுளிதுறையில் உள்ள வாய்ப்பு கள், வளர்ச்சிகள், புதிய முதலீடுகள், பன்னாட்டு சந்தை மற் றும் அதனுடைய சாராம்சம் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்வ தற்கான இணையதள இணைப்பு (https://bit.ly/CIITechnic alTextiles). மேற்படி கருத்தரங்கில் ஜவுளி தொழில் முனை வோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
பில்டர் காபி நிலையம் அமைத்திட தாட்கோ மானியத்துடன் கடனுதவி
திருப்பூர், நவ.7- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வழியாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்கு டியினர் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்க ளில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட் டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி யும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டண விலக்கு அளிக் கப்படும். இத்தொழில் திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப் படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www. tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தொழிலுக்கு ரூ.6.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை திட்டத்தொகையை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதி திராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம்ரூ.2.25 லட் சம், பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். மேலும் விபரங் களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண் 501 (ம) 503, 5வது தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பல்ல டம் ரோடு, திருப்பூர் -641604. தொடர்புக்கு: அலைபேசி எண்: 94450 29552, தொலைபேசி எண்: 0421 -297112 தெரிவிக்கப் பட்டுள்ளது.
\பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு: 3 பேர் கைது
அவிநாசி, நவ.7- அவிநாசி மடத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (50), இவரது மனைவி யுவராணி, மகன் கனிஷ்க். இவர்கள் 3 பேரும் சனிக்கிழமை இரவு திருப்பூரில் இருந்து அவிநாசி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் - அவிநாசி சாலை அவிநாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே செல்லும் போது, இவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் யுவராணி கழுத்தில் அணிந்திருந்த ஏழரை மற்றும் மூன்று பவுன் என இரு தங்க சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதில், நிலைதடுமாறிய யுவராணி, அவரது மகன் கனிஷ்க் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந் தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இது குறித்து கந்தசாமி அளித்த புகாரின் பேரில் அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவிநாசி போலீஸார் தெக்கலூரில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றி ருந்த ஈரோடு, கவுந்தப்பாடி ஒத்தக்குதிரை நஞ்ச கவுண்டம்பா ளையம் பகுதியைச் சேர்ந்த ராஜமூர்த்தி மகன் பிளேடு கவின் (எ) கவின் (21), கூடலூர் உசப்பூர் விபிஸ்ணபுரம், தெற்கு தில்லைநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மகன் மாரியப்பன் (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும், மற்றொரு நபர், தங்கச் சங்கிலியை,விற்பதற்கு உதவி புரிந்த கோபி, குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலன் மகன் ராகுல் கணேஷ் (24) என்பதும் தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; ரூ.1.45 லட்சம் பறிமுதல்
திருப்பூர், நவ. 7 – திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு, கணக்கில் வராத ரூ.1.45 லட்சம் பணத்தைப் பறிமுதல் செய்தனர். திருப்பூர் குமார்நகர் பகுதியில் திருப் பூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவல கம் செயல்பட்டு வருகிறது. இங்கு லஞ் சம் வாங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செவ்வாயன்று திடீர் சோதனை நடத்தி னர். அப்போது அந்த அலுவலகத்தில் ரூ.1.45 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, கணக்கில் வராத பணம் யாருடையது என்று விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். குறிப்பாக தீபாவளி பண்டிகை நெருங்கியிருக்கும் நிலையில், தற்கா லிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு தனியார் விற்பனையாளர்கள், தீய ணைப்பு நிலைய அலுவலகத்தில் தடை யின்மைச் சான்று பெற வேண்டியது கட் டாயம். இந்த சான்றிதழ் பெறுவதற்கு விற்பனையாளர்களிடம் லஞ்சம் பெறு வதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே லஞ்ச ஒழிப்பு போலீ சார் இங்கு சோதனை மேற்கொண்டுள் ளது குறிப்பிடத்தக்கது.
ரூ. 22.51 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, நவ.7- அவிநாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடை பெற்று ஏலத்தில் சுமார் 155 விவசாயிகள் கலந்து கொண்டு 1,035 மூட்டைகள் நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். அவிநாசி சுற்றுவட்டார வியாபாரிகள் 9 பேர் கலந்து கொண்டு மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன் றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.8,000 முதல் ரூ 8,340 வரையி லும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,450 முதல் ரூ.8,000 வரை யிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,450 வரையிலும் பச்சைநிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.5,500 வரை யிலும் ஏலம் போனது மொத்தம் ரூ.22.51 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.
ஆயுர்வேத மருத்துவ தினம்: ஜெய்வாபாய் பள்ளியில் சிறப்பு முகாம்
திருப்பூர், நவ. 7 – ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன் னிட்டு திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயுர் வேத மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற் றது. ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன் னிட்டு ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தமி ழக அரசின் ஆயுர்வேத மருத்துவமனை சார் பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மருத் துவ முகாமில் ஆயுர்வேத மருத்துவத்தின் நன்மைகள் மற்றும் ஆயுர்வேத மருந்து களின் தன்மைகள் குறித்து மருந்துகள் காட் சிப்படுத்தப்பட்டு மாணவியருக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சளி மற் றும் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து தங் களை தற்காத்துக் கொள்ளக்கூடிய வகையி லான எளிய மருந்துகளை மாணவிகளுக்கு மருத்துவர்கள் வழங்கினர்.
மின் கட்டணத்தை குறைக்க அமைச்சர்களிடம் கோரிக்கை
திருப்பூர், நவ. 7 - மின் கட்டண உயர்வு, உச்சநேர பயன்பாட் டுக் கட்டணத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட் டமைப்பினர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்களிடம் மனு அளித்தனர். ஏற்கெனவே உயர்த்தப்பட்ட மின் கட்ட ணத்தையும், பீக்ஹவர் எனப்படும் உச்சநேர பயன்பாட்டு மின் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பின் சார்பில், திருப்பூர் தொழில் அமைப் புகளின் கூட்டமைப்பு மற்றும் மறுசுழற்சி ஜவு ளிக் கூட்டமைப்பு நிர்வாகிகள் இணைந்து திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிர் வாகிகள், டிசம்பர் 4ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனித சங்கிலி போராட்டமும், டிசம்பர் 18ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற உற் பத்தி நிறுத்த போராட்டமும் நடைபெறும் என தெரிவித்தனர்.
வாடகை கார் ஓட்டுநர் மீது தாக்குதல்
திருப்பூர், நவ.7 - திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் வாடகை கார் ஓட் டுநரை தாக்கிய இளைஞரை காவல்துறையினர் விசார ணைக்கு அழைத்து சென்றனர் திருப்பூர் கல்லூரி சாலை வஞ்சிபாளையம் பகுதியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரெட்டாக்ஸி ஓட்டுனர் அஜய், முன்னால் சென்ற பிரவீன் என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த பிரவீன், கார் ஓட்டுநர் அஜய்யை தாக்கினார். இதில் அஜய் காயமடைந்து தலையில் ரத்தம் கொட்டியது. உடனடியாக அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் அஜய்யை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும் தாக்குதல் நடத்திய பிரவீனை விசாரணைக் காக 15வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
வாடிக்கையாளரின் வாகனம் காணாமல் போனால் கடை உரிமையாளரே பொறுப்பு
தருமபுரி, நவ.7- ஜவுளி கடைகள் முன்பு நிறுத்தப்படும் வாடிக்கையா ளர்களின் வாகனம் மற்றும் நகைகள் திருடு போனால் கடை உரிமையாளரே பொறுப்பேற்க வேண்டும் என காவல் துறை யினர் தெரிவித்துள்ளனர். தருமபுரி நகர காவல் நிலையத்தில் ஜவுளி கடை உரிமை யாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் தருமபுரி நகர காவல் ஆய்வாளர் ரங்கசாமி தலைமையில் நடைபெற் றது. அப்போது ரங்கசாமி பேசுகையில், அனைத்து ஜவுளி கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண் டும். பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் வேலை செய்கிறதா? என சோதனை செய்ய வேண்டும். கடைகளின் முன்பு நிறுத் தப்படும் வாடிக்கையாளர்களின் வாகனங்களுக்கு தனியாக காவலாளி (செக்யூரிட்டி) நியமித்துக்கொள்ள வேண்டும். ஜவுளி கடைகள் முன்பு இருசக்கர வாகனங்கள் திருடு போனால் கடை உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண் டும். மேலும், ஜவுளி கடையின் உள்புறமோ, வெளிப்புறமோ தங்க நகைகள் காணாமல் போனால் கடை உரிமையா ளர்களே பொறுப்பேற்க வேண்டும், சாலையில் விளம்பர பேனர்களை வைக்கக்கூடாது, போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்ப்பட்டால் சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.
3 ஆண்டு சட்டப்படிப்பு: முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
சேலம், நவ.7- சேலம் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கான, முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா செவ் வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பேகம் பாத்திமா வரவேற்றார். கல்லூரியின் தலை வர் சரவணன் தலைமை வகித்து பேசுகையில், இந்த சமு தாயத்தில் வெறும் பட்டம் மற்றும் போதாது; தனித்திற மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வழக்கறிஞர்களா கிய உங்கள் கையில் நாட்டின் எதிர்காலம் உள்ளது. முந்தைய காலத்தில் உரிமையியல், குற்றவியல் துறைகளுக்கு மட் டுமே வாய்ப்புகள் இருந்தன. இன்றைய காலத்தில் நிறுவ னங்களிலும் உரிமையியல், இசைவு தீர்ப்பு, அறிவுசார் சொத்து வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், சமரச மையங் கள், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பல துறைகளில் வழக்கறி ஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் தினம் ஒரு தீர்ப்புகளையாவது படிப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். பேச்சு வாதம், மொழி திறமை கள் இருந்தால் மட்டுமே வழக்கறிஞராக திறம்பட செயல்பட முடியும், என்றார். இதைத்தொடர்ந்து திருச்சி சட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் நாகராஜ் பேசுகையில், வழக்கறிஞர் தொழில் மற்ற தொழிலில் இருந்து மாறுபட்டது. இதில் ஒரு சிலர் மட்டுமே உச்ச நிலைக்குச் செல்கிறார்கள். இந்த நிலை மாற நல்ல வாதத்திறமையுடன், கடின உழைப்பும், தொழில் நெறிமுறை களையும் கற்றுக்கொள்ள வேண்டும், என்றார். முடிவில், கல்லூரி துணை முதல்வர் சாந்தகுமாரி நன்றி கூறினார். இதில் கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், துணை நிர்வாக அதிகாரி சுகந்தி, உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பணி நிறைவு: பேராசிரியர்களுக்கு பாராட்டு
சேலம், நவ.7- சேலம் அரசு கலைக்கல்லூரியில் பணி நிறைவு செய்த பேராசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், வின்சென்டில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பேராசிரியர்க ளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர் விஜயகுமார் வரவேற்றார். முதல்வர் செண்பக லட்சுமி தலைமை வகித்தார். கணிதவியல் துறைத்தலைவர் சிவராம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பிரேமலதா, புவிய மைப்பியல் துறைத்தலைவர் ஜெயபாலன், கூட்டுறவு பேரா சிரியர் பிச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு பணியில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், ரூ.2000 வெகுமதி வழங்கும் நடைமுறை உள்ளது. அதன்படி, சேலம் அரசு கலைக்கல்லூரியில் கல்வி பணியில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 15 இணை பேராசிரியர்கள், ஒரு அலுவலக கண் காணிப்பாளர், பெரியார் பல்கலைக்கழகத்தில் சிறந்த ஆராய்ச் சியாளர் விருது பெற்ற பேராசிரியர்களுக்கு சால்வை அணி வித்து, சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் துறைத்தலைவர்கள், பேராசிரியர் கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பணி நிறைவு பெற்ற பேராசிரியர்களுக்கு மாணவர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர்.
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்
சேலம், நவ.7- கொண்டலாம்பட்டி - புத்தூர் சாலையில் ரயில்வே சுரங் கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சேலத்தில் இருந்து மல்லூர், ராசிபுரம், நாமக்கல் வழியாக கரூர் வரை ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிப் பாதையில் கொண்டலாம்பட்டியில் இருந்து புத்தூர் வரை செல்லும் சாலையில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. பல நாட்களாக மழைநீர் தேங்குவதால் பாசிபடர்ந்து தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. ரயில்வே சுரங் கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். எனவே, சுரங்கபாதையில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, சாலையை பயன்படுத்த சம்மந்தப்பட்ட அதிகா ரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காற்று மாசுவை பதிவு செய்ய கருவி
சேலம், நவ.7- தீபாவளி பண்டிகையின் போது, ஒலி மற்றும் காற்று மாசுவை பதிவு செய்ய பல்வேறு இடங்களில் கருவி பொருத் தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நவ.12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, சிறுவர்கள் முதல் பெரியவர் கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத் துவார்கள். பட்டாசு வெடிக்க காலை 6 மணி முதல் 7 மணி வரை யும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சர வெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவ மனைகள், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப் படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண் டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதனி டையே, சேலத்தில் ஒலி அளவையும், காற்றின் மாசு அளவை யும் பதிவு செய்யும் வகையில் கொண்டலாம்பட்டி, மெய்யனூ ரில் கருவி பொருத்தப்பட்டுள்ளது. சூரமங்கலம் சோனா கல்லூரியிலும் காற்றின் மாசு அளவை பதிவு செய்யும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பும், பின் பும் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தி லும் இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அரசு அலுவலகத்தில் திருட்டு
ஈரோடு, நவ.7- ஈரோட்டில் அரசு அலுவலகத்தில் இருந்த மடிக்கணினி மற்றும் ஒரு கேமராவை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகம் உள் ளது. இந்நிலையில், துணை இயக்குநர் அலுவலகத்தி லிருந்த மடிக்கணினி மற்றும் கேமராவை அடையாளம் தெரி யாத நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதன்பின் அங்கிருந்த அலுவலகத்திற்குள் புகுந்து ஒரு லேப்டாப் மற்றும் பணம் ரூ.9 ஆயிரத்தை திருடியுள்ளனர். தொடர்ந்து அருகிலுருந்த நிதி நிறுவனத்திலும் திருட முயற்சித்துள்ளனர். ஆனால், பணம் பொருட்கள் ஏதும் சிக்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்த ஈரோடு தெற்கு போலீசார் திருட்டு நடந்த அலுவலகங்களுக்கு சென்று விசாரணை நடத்தி ஆய்வு செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, பொருட்களை திருடிச்சென்ற நபர் களை போலீசார் தேடி வருகின்றனர்.
தெருநாய் கடித்து 10 பேர் காயம்
நாமக்கல், நவ.7- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள கத் தாளபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விமலா. இவரது கணவர் மாதேஸ்வரன். இவர்களது 2 வயது மகள் ஹரிணி அப்பகுதி யில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி யில் இருந்த தெருநாய் ஒன்று ஹரிணியின் முகத்தில் கடித் தது. இதில் அந்த குழந்தைக்கு முகத்தில் பல காயங்கள் ஏற் பட்டன. வலியால் துடித்த குழந்தையை பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இதேபோல் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சாலை யில் செல்வோரையும் அந்த வெறிநாய் கடித்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் நகராட்சி பணியாளர்கள் அந்த நாயை பிடித்தனர்.
உதவி ஆய்வாளர் பணி: உடற்தகுதி தேர்வு
கோவை, நவ.7- தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வாணையம் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காவல் உதவி ஆய்வாளர் பணிக் கான எழுத்து தேர்வு சில மாதங்களுக்கு முன்பு நடை பெற்றது. இதில் தேர்ச்சி பெற் றவர்களுக்கு உடல் தகுதித் தேர்வுக்கு அழைப்பு விடுக் கப்பட்டிருந்தது. கோவை யில் 427 பேருக்கு உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டி ருந்த நிலையில், செவ்வா யன்று கோவை பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண் டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடை பெற்றது. தொடர்ந்து, சான் றிதழ் சரிபார்ப்பு பணியும் நடைபெற்றது. இதனை மேற்கு மண்டல ஐஜி பவா னீஸ்வரி, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.