districts

img

கொத்தடிமை முறை ஒழிப்பு தின உறுதி ஏற்பு

பள்ளிபாளையம், பிப்.12- பள்ளிபாளையத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப் பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எக்ஸல் வணிக வியல் மற்றும் அறிவியல் கல்லூரியில், கொத்தடிமை தொழி லாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் விமல் நிஷாந்த் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பால சரவணன் உறுதிமொழி முழங்க, மாணவர்கள் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறையை முற்றிலும் ஒழித்திட வேண் டும். சமுதாயத்தில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொத்தடிமை தொழிலாளர் முறை எந்த தொழிலில்  இருந்தாலும், அதனை அடையாளம் கண்டு தக்க நடவ டிக்கை எடுக்க  எடுக்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை  எழுப்பியபடி, மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட னர். இந்நிகழ்வு ஒருங்கிணைப்புகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசரவணன், பூபதி, சுகன்யா ஆகியோர் செய்திருந்தனர்.