districts

img

பாம்பே சர்க்கஸ்: ஆதரவற்றவர்கள் நெகிழ்ச்சி

கோவை, ஜூலை 14- கோவையில், ஆதர வற்ற முதியோவர்களுக்கு பாம்பே சர்க்கஸை கண்டு  ரசித்தனர். தன்னார்வலர்கள் மற்றும் பாம்பே சர்க்கஸ்  நிர்வாகத்தினர் இணைந்து  முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர்  இல்லங்களில் வசிக்கும் 2  ஆயிரம் பேரை இலவசமாக  பாம்பே சர்க்கஸ் காட்சிக்கு அழைத்துச்  சென்றனர். கோவையில், தி கிரேட் பாம்பே சர்க்கஸ்  தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந் தோறும் மூன்று காட்சிகள் நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில், கோவையில் 15க்கும் மேற் பட்ட தன்னார்வ அமைப்புகள், கேட்டரிங் சங்கத்தினர்  இணைந்து ஆதரவற்ற முதி யோர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தை களை பாம்பே சர்க்கஸ் பார்க்க அழைத்து வந்தனர். இந்த சிறப்பு சர்க்கஸ் காட்சியை பார்க்க வந்த  2 ஆயிரத்திற்கு ஆதரவற்ற மக் களுக்கு தன்னார்வ அமைப்பினர் சார்பில் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும்,  காலை மற்றும் மதிய உணவு வழங்கப் பட்டன. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னார்வலர்களாக கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு உத வினர். இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து  சர்க்கஸ் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  மீண்டும் ஒரு முறை சர்க்கஸ் பார்க்க ஆசைப் படுவதாகவும் சர்க்கஸ் காட்சியை பார்த்த வர்கள் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.