districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அரசு மருத்துவமனையில் வேலை

தருமபுரி, ஆக.29- தருமபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர், மன நல ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க லாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள செவிலியர், மனநல ஆலோசகர் பணி யிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. அதன்படி செவிலியர் (பணியிடம் 1)  பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், செவிலியர்  பிரிவில் டிப்ளமோ அல்லது இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்தி ருக்க வேண்டும். மனநல ஆலோசகர் (பணியிடம் 1)  பணிக்கு, உளவியல் (Psychology), பயன்பாட்டு உளவி யல் (Applied Psychology), மருத்துவ உளவியல் (Clinical Psychology) ஆகிய ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். மனநல சமூக சேவகர் (பணியிடம் 1) பணிக்கு, மருத்துவம், மனநல மருத்துவம் (Psychiatric) பாடங்களுடன் சமூக பணி (Social Work) பிரிவில் எம்.ஏ., முடித்திருக்க வேண்டும். www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றி தழ்களின் நகல்களையும் இணைத்து, மாவட்ட சுகாதார  அலுவலர், மாவட்ட சுகாதார சங்கம், ஆட்சியர் வளாகம்  (அருகில்), தருமபுரி - 636 705 என்ற முகவரிக்கு, ஆக.31 ஆம் தேதி (நாளை)க்குள் அனுப்பி வைக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் விளையாட்டுப் போட்டிகள்

சேலம், ஆக.29- தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, சேலத்தில் வியாழனன்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெற் றது. ஒவ்வொரு ஆண்டும் மேஜர் தயான்சந்த் பிறந்த நாளான ஆக.29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதா னத்தில் பல்வேறு போட்டிகள் வியாழனன்று நடை பெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமை வைத்து, போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங் கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சி யில், உடற்பயிற்சி அலுவலர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

தொப்பூர் கணவாயில் விபத்து: பெண் பலி

தருமபுரி, ஆக.29- தொப்பூர் கணவாய் பகுதியில் நிகழ்ந்த சாலை  விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தெலங்கானா மாநிலத்தில் இருந்து கோவை நோக்கி பவுடர் பாரம் ஏற்றிக் கொண்டு சேலம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம், தொப்பூர், ஆஞ்ச நேயர் கோவில் வளைவில் அந்த லாரி சென்றபோது, திடீ ரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. வேகமாக சென்ற லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. அப்போது லாரிக்கு பின்னால் வந்த மற் றொரு கார் லாரி மீது வேகமாக மோதியது. இந்த  விபத்தில் பின்னால் வந்த காரில் பயணித்த சேலத்தைச்  சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி செல்வ லீலா  (40), அவரது தந்தை துரைராஜ் (56) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவறிந்த தொப் பூர் காவல் துறையினர், விபத்தில் சிக்கிய இருவரை யும் மீட்டு அவசர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வலீலா மருத்துவமனைக்குச் செல்லும் வழி யிலேயே உயிரிழந்தார். துரைராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

இறுதிக்கட்டத்தில் உபரிநீர் வடிகால் பணிகள்!

சேலம், ஆக.29- நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக் கப்பட்டு வரும், சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வடிகால்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளன. சேலம் மாவட்டம், சிவதாபுரத்தை அடுத் துள்ள சேலத்தாம்பட்டி ஏரி ஒவ்வொரு ஆண் டும் மழைக்காலங்களில் நிரம்புவதுடன், அதி லிருந்து வெளியேறும் உபரிநீரானது சிவதா புரம் பகுதியில் உள்ள சாலை, குடியிருப்பு களில் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல்  ஏற்படுவதுடன், நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி, சிவதாபுரம் பகுதி மக்கள், வியா பாரிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு  வந்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில், 1,500 மீட்டர் நீளம் அளவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த சாலை மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ், நடைபெற்று வரும் இப்பணிகள், கடந்த ஜனவரி மாதம் தொடங் கப்பட்டு, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ளன. இப்பணிகள் நிறைவடையும் பட்சத் தில், மழைநீர் தேங்காமல் தடுக்கப்படுவது டன், வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டு உபரிநீர் திருமணிமுத்தாற்றில் கொண்டு  சேர்க்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்கண்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்பூர் ஆக. 29 -  திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை மற்றும் சென்னையைச் சேர்ந்த, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.  சிக்கண்ணா அரசு கல்லூரியின் குமரன் அரங்கில் இதற்கான விழா நடைபெற்றது. நிகழ்ச்சியைக் கல்லூரி முதல்வர் வ. கிருஷ்ணன் தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினார்.  நிகழ்ச்சி ஒருங்கிணைப் பாளர் ஆ.சித்ரா தவப்புதல்வி, வரவேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றியும், அதன் நோக்கம் குறித்து பேசி னார். சென்னை, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு (எஸ் ஏ எல் ஐ எஸ்) தலை வர் ஏ.எம் வெங்கடாசலம் தமது அமைப்பு பற்றியும், அவற்றின் சேவைகளைப் பற்றியும் எடுத்துரைத்தார். சென்னை, நூலகம் மற்றும் தகவல் அறிவியல் மேம் பாட்டு அமைப்பு பொது செயலாளர் மேஜர் டி.மகுடீஷ்வ ரன், இவ்வமைப்பின் மூலம் அரசு கல்லூரி மாணாக்கர் கள் பெறப் போகும் வாய்ப்புகளையும் அதன் மூலம் தங்களது அறிவையும் திறனையும் எவ்வாறு வளர்த்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.  பேராசிரி யர் டி. ஸ்டிபஃன் தனது சிறப்புரையில் “கற்றல்- மனதை, செயலை புதுப்பிக்கும் உந்து சக்தி” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி, மாணாக்கர்கள் தொடர்ந்து புத்தக வாசிப்பின் மூலம் தன்னைத் தான் அறிதல், திறமைகளை புதுப்பித்தல், வாழ்வின் நோக்கத்தை உணர்ந்து வாழ்தல் என்பதை வலியுறுத்தினார். பொருளியல் துறை தலைவர் எம்.கே.வினாயக மூர்த்தி வாழ்த்தி பேசினார். இந்த விழாவில் முதுகலை  மாணாக்கர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக, ஆங்கிலத் துறை சிறப்பு நெறியுரையாளர் சுபஸ்ரீ நன்றி கூறினார்.

மைதானத்தில் விளையாடுங்கள்

திருப்பூர், ஆக. 29 - செல்போனில் விளையாடுவதை தவிர்த்து மைதா னத்தில் விளையாடுவது சிறந்தது என உடற்கல்வி இயக்குனர் ராஜாராம் கூறினார். தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக விளையாடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றிய கருத்தரங்கம்  நடைபெற்றது. மாணவ பிரதிநிதி மது கார்த்திக் முன்னிலையில் பேராசிரியர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உடற்கல்வி இயக்குனர் ராஜா ராம் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். அவர் பேசுகையில், இன்றைய காலங்களில் மாணவர்கள் கைப்பேசி விளையாட்டுகளில் (வீடியோ கேம்ஸ்) அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், அடிமையாகி வரு கிறார்கள். அதை தவிர்த்து விட்டு ஒவ்வொரு நாளும் மைதானத்தில் குறைந்தது ஒரு மணி நேரமா வது விளையாடினால் உடல் உறுதி மற்றும் மனவலிமை பெறும் என்றார்.

சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் பணி வாய்ப்பு

ஈரோடு, ஆக. 29- சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்பு என்ற பிரிவில் துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப் படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதி மற்றும் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களிடமிருந்தும், அலுவலக உதவி யாளர்கள், எழுத்தர்கள் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது.மேலும் விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்ற இணையதள https://erode.dcourts.gov.in/ பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை, ஆக 29- கோவையில் தனியார் கல்லுரி விடுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மாணவர் ஒருவர் விற்ப னைக்கு வைத்திருந்த 2.5 கிலோ கிராம் கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.  கோவை மாவட்டத்தில், ஏராளமான கல்லுரிகள் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் விடுதியிலும் தங்கி பயின்று வருகின்றனர். மணவர்களிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை உட்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச் சாட்டு எழுந்தது. இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு, சூலூர், கரும்பத்தப்பட்டி உள்ளிட்ட கல்லூரி விடுதிகளின் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், மாணவர் அல்லாத நபர்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அவ்விடுதியில் இருந்து கஞ்சா மற்றும் குற்ற செயலில் ஈடுபட்ட 10 மேற்பட்ட நபர்கள் கைது செய்யப் பட்டனர்.  இதன் தொடர்சியாக தடாகம் காவல் நிலைய பகுதி யில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படை யில் தடாகம் போலீசார் தனிப் படை அமைத்து, தடாகம் - கணுவாய் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை சந்திப்பு அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுக்க ரையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாண வரிடம் 2.5 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சம்பந்தப் பட்ட கல்லூரி மாணவரிடம் நடத்திய விசாரணையில், இது போன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற நபர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போலுசார் தெரிவித்த னர். 

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம், ஆக.29- சேலம் மற்றும் நாமக்கலில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்ப வத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரம், குரும்பம்பட்டி பகுதியில் செயல்படும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற பள்ளியில், அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் வெடிகுண்டு இருப்பதாக வியாழனன்று தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளித்து பள்ளி நிர்வாகம் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டது. சேலம் மாநகர வெடி குண்டு சோதனை காவல்துறையினர் மற்றும் கள்ளங்குறிச்சி  காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வரு கின்றனர். வெடிகுண்டு சோதனை நடப்பதால், மாணவ மாண விகள் பாதுகாப்பாக அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள எட்டிமடை புதூர் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் பள்ளியின் கிளைகளில் ஒன்றான மழ லைப் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இத னால் பள்ளியி்லிருந்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும், அதே பள்ளி வளாகத்தில்  இயங்கி வரும் விஷ்ணு வித்யாலயா மெட்ரிக் பள்ளியிலிருந் தும் மாணவ, மாணவிகள் வெளியேற்றப்பட்டனர்.

கருவேல மரங்களை ஏலம் விடுவதில் சுணக்கம்

மேட்டுப்பாளையம், ஆக 29- வனப்பகுதியில் இருந்து வெட்டி அகற்றிய சீமை கரு வேல மரங்களை ஏலம் விடுவதில் தாமதம் ஏற்படுவதால், மரங்கள் மண்ணோடு மண்ணாக மக்கி வீணாகி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறு முகை வனச்சரகத்தில் 11 ஆயிரத்து 683 ஹெக்டர் நிலப் பரப்பில் காடுகள் அமைந்துள்ளது. இவ்வனப்பகுதியில் உள்ள மலைகளை தவிர நிலப்பரப்பில் டெல்லி முள்  என்றழைக்கப்படும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்தி ருந்தன. இவை வனச்சூழலை பாதித்து, வனவிலங்குகளின் உணவான தீவன மரங்கள் மற்றும் செடி கொடிகள் வளர  முடியாத நிலை ஏற்பட்டது. இவற்றை வெட்டி அகற்றவும் மரங்களை அரசின் அனுமதி பெற்று ஏலம் விட்டு, இதன் வரு வாயை வனத்துறைக்கு சேர்க்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, வனத்துறையினர் முள் மரங்களை வேரோடு வெட்டி வனத்திலிருந்து இருந்து அகற்றினர்.  வெட்டப்பட்ட சுமார் 800 டன் முள் மரங்கள் வன எல்லை களில் அடுக்கி வைத்துள்ளன. இவற்றை முறைப்படி ஏலம் விடவும் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், தற்போது அப்பணி யில் சுணக்கம் ஏற்பட்டு அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படு வதால், கடந்த 5 மாத காலத்திற்கும் மேலாக வெட்டி அடுக்கி வைக்கப்பட்ட மரங்கள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்து வருகிறது.  இதனால் மரத்தின் தரம் குறைந்து சேதமாகும் நிலை  உருவாகி வருகிறது. மேலும் மரங்கள் அடுக்கி வைக்கப்பட் டுள்ள இடத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி யளிப்பதால் அங்கு பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங் கும் ஆபத்தும் உள்ளது. மரங்களின் தரம் குறைந்தால் அதனை ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டு யாருக்கும் பயனின்றி வனத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இது குறித்து, சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, “அரசின் அனு மதி பெற்று அதற்கான நடைமுறைகளுடன் வெட்டிய மரங் களை விரைவில் ஏலம் விட மாவட்ட வனத்துறை நடவ டிக்கை எடுத்து வருவதாக” தெரிவித்தார்.

சென்னை ரயில் பகுதியாக ரத்து

சேலம், ஆக.29- ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - சென்னை ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, அரக்கோ ணம் அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடை பெற உள்ளது. இதனால் கோவை - சென்னை ரயில் (எண்:12680) செப்.1 ஆம் தேதி கோவை - காட்பாடி இடையே மட்டும் இயக்கப்படும். காட்பாடி - சென்னை இடையே இயக் கப்படாது. இதேபோல, சென்னை - கோவை ரயில் (எண்: 12679)  காட்பாடி - கோவை இடையே மட்டும் இயக்கப்படும். சென்னை - காட்பாடி இடையே இயக்கப்படாது என தெரி விக்கப்பட்டுள்ளது.

வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படுவதா!

நாமக்கல், ஆக.29- சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப்பெற வேண் டும் என நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 64 சுங்கச்சாவடிகளில்,செப்.1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. சென்ன சமுத் திரம், எலியார்பதி, கொடை ரோடு, கிருஷ்ணகிரி, மேட் டுப்பட்டி, மொரட்டாண்டி, நாதக்கரை, ஸ்ரீபெரும்புதுார், ஓம லுார், பாளையம், புதுார் பாண்டியபுரம், சமயபுரம், ஸ்ரீவை குண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம், விக்கிரவாண்டி ஆகியவை கட்டணம் உயர்த்தப்பட உள்ள சுங்கச்சாவடிகள். இங்கு, 5 சதவிகிதம் கட்டண உயர்வு நடை முறைக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வு அறிவிப்பை  திரும்பப்பெற வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியு றுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ் சாலைகளில் போதிய சாலை பராமரிப்பு இல்லாமலும், காலவ தியான சுங்கசாவடிகளை அகற்றாமலும் வருமானம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு சுங்கக்கட்டண வசூலில் மத்திய அர சும், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையமும் ஈடுபட்டு வரு கிறது. எனவே, போக்குவரத்து தொழிலில் உள்ள பிரச்சனை கள் மற்றும் சுங்கக்கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு ஏற் படும் பாதிப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.