districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நகை திருட்டு: தம்பதி கைது

நகை திருட்டு: தம்பதி கைது கோவை, மார்ச் 11- கோவை நகை பட்டறையில் ரூபாய் 40 லட்சம் மதிப்பி லான தங்கத்தை திருடிய தம்பதியை, தனிப்படை போலீ சார் கைது செய்யப்பட்டனர். மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியரா ஜன். இவர் கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி ரோட்டில் பழனிக் குமார் என்பவரது நகைப் பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை செய்யும் வேலை செய்து வந்தார். இவரு டைய மனைவி உமா மகேஸ்வரி. கணவன் - மனைவி இருவரும் வடமதுரை வி.எஸ்.கே நகரில் வாடகைக்கு தங்கி  இருந்து வந்தனர். 9 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் பாண்டிய ராஜன் வேலை செய்து வந்ததால், இவரை நம்பி விட்டு  விட்டு உரிமையாளர் பழனிகுமார் வெளியே செல்வது வழக் கம். இந்நிலையில், பட்டறையில் உள்ள நகைகளை திருடி  வெளியூர் சென்று அதனை விற்று செலவழிக்கலாம் என  பாண்டியராஜனிடம் அவருடைய மனைவி உமா மகேஸ்வரி  கூறியதாக தெரிகிறது.  இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 17ஆம் தேதி நகை பட்ட றையில் யாரும் இல்லாத போது 800 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை எடுத்துக்கொண்டு மனைவியை அழைத்துக் கொண்டு பாண்டியராஜன் வெளியூர் தப்பிச் சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து  ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தம் பதியை தேடி வந்தனர்.  தஞ்சாவூர் அருகே ஒரு வீட்டில்  பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பாண்டியராஜனையும், அவரு டைய மனைவி உமா மகேஸ்வரியையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான 800  கிராம் தங்கத்தை மீட்டனர். இதனைத்தொடர்ந்து இருவரும்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தில் விஷம் அருந்திய போக்சோ குற்றவாளி

நீதிமன்றத்தில் விஷம் அருந்திய போக்சோ குற்றவாளி நீலகிரி, மார்ச் 11- 12 ஆம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 24 ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்த குற்றவாளி நீதிமன்றத் திலேயே விஷம் அருந்திய சம்பவம் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சேர்ந்த 17வயது சிறுமி,  அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தந்தை கருத்து வேறுபாடு  காரணமாக குடும்பத்தை விட்டு தனியாக சென்று விட்டதால், தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.  இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு, மாணவிக்கு  உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, வயிறு வலி அதிகமானதால் உடனடியாக குன்னூர் அரசு மருத்துவமனையில் மாண வியை அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவியை சோதனை  செய்து பார்த்ததில், அவர் கருத்தறித்து இருப்பது தெரிய வந்தது. மேலும், மாணவியின் உடல்நிலை பாதுகாப்பு கருதி மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.  இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாயார் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், பாலியல்  பலாத்கார குற்றச்சாட்டிற்காக, மரம் அறுக்கும் தொழிலாளி  தம்பா என்ற குணசேகரனை (55) போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னர் சிறை யில் அடைக்கப்பட்ட குணசேகரன் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை, உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப் பட்ட தம்பா என்ற குணசேகரனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ. 6000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் தீர்ப்பு வழங்கினார்.  இதைத்தொடர்ந்து, குற்றவாளியை கைதிகள் காத்தி ருப்பு அறைக்கு அழைத்துச் சென்ற போது, தனது பையில்  இருந்த விஷத்தை உட்கொண்டார். இதில் மயங்கிய அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு  மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தண்டனை அறிவிக் கப்பட்ட சில நிமிடங்களிலேயே குற்றவாளி விஷம் குடித்த  சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் வணிக வளாகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கோவை, மார்ச் 11- மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சரியான முறையில் தரம் பிரித்து வழங்காத  வணிக வளாகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபரா தம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் உத்த ரவிட்டார். கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திங்களன்று மத்திய மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாநகராட்சி பணிகளை நேரில் சென்று  ஆய்வு செய்தார். அப்போது மத்திய மண்ட லம் 67 ஆவது வார்டுக்கு உட்பட்ட ராம் நகர், தேசபந்து பகுதியில் நடைபெற்று வரும்  மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதியில் அமைந்துள்ள தனி யார் வணிக வளாகம் ஒன்று மக்கும் குப்பை,  மக்காத குப்பைகளை சரியான முறையில் தரம் பிரித்து வழங்கவில்லை. இதனை கண்ட  மாநகராட்சி ஆனையாளர், அந்த வணிக வளாகத்திற்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

கோடை சீசனுக்கு தயாராகும் உதகை நகரம்

சாலை விரிவாக்கத்திற்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு

நீலகிரி, மார்ச் 11- கோடை சீசனில் போக்குவரத்து  நெரிசலுக்கு தீர்வு காணும் வகை யில், உதகை - மேட்டுப்பாளையம் சாலை ரூ. 32 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாகவும், கோவை உள்பட தமிழகத்தின் மற்ற  மாவட்டங்களில் இருந்து குன்னூர், கோத்தகிரி சாலை வழியாகவும் ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் வாக னங்களில் வருகின்றனர். இதனால்  உதகை - குன்னூர் - மேட்டுப்பா ளையம் சாலை அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப் பாக சீசன் காலங்களில் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வருவ தால், குன்னூர் சாலை ஒருவழி பாதை யாக மாற்ற வேண்டிய சூழ்நிலை  உள்ளது. இந்நிலையில், விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், மற்ற சாலைகளில் தடை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் வகையிலும் உதகை – குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையை விரிவுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணி கள் கடந்த ஓராண்டுக்கு முன்னர்  தொடங்கி சமீபத்தில் முடிக்கப்பட் டது. இதனால் உதகை - மேட்டுப்பா ளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாவிட்டாலும், உதகை நகருக்குள் நுழைந்ததும் ஏற்படும் போக்குவரத்து நெரி சலினால் வாகன ஓட்டிகள் திண்டா டுகின்றனர். எனவே உதகை - மேட்டுப் பாளையம் சாலையில் லவ்டேல் சந்திப்பு பகுதியில் இருந்து சேரிங் கிராஸ் வரை அகலப்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறுகையில், லவ் டேல் சந்திப்பு பகுதியில் இருந்து சேரிங்கிராஸ் வரை செய்யப்படும் சாலை விரிவாக்க பணிக்கு ரூ. 32  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் பிங்கர் போஸ்ட் பகுதியில்  உள்ள ஒரு சில இடத்திலும், குன்னூர்  பகுதியில் ஒரு சில இடத்திலும் சாலை அகலப்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும். மேலும் சேரிங்கி ராஸ் பகுதியில் உயர்மட்ட மேம்பா லம் கட்டுவதற்காக விரிவான திட்ட  அறிக்கை தயாரித்து அனுப்பப்பட் டுள்ளது என்றார்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி 

ஏலச்சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி  திருப்பூர், மார்ச் 11- ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திருப்பி தராமல் மோசடியில்  ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை  மீட்டுதர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் திங்களன்று மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் நஞ்சப்பா நகர் பகு தியில் வசித்து வந்த திருமூர்த்தி சாந்தி தம்பதியினர் கடந்த ஆறு வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இவர்களி டம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் சீட்டு சேர்ந்து  வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏலச் சீட்டை நிறுத்துவதாகவும் தங்களால் நடத்த முடியவில்லை எனவும் தங்கள் கட்டிய பணத்தை வீட்டை விற்று ராம்  லட்சுமி என்ற வழக்கறிஞர் மூலம் திருப்பித் தருவதாக கூறி யுள்ளனர்.  இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி வீடு விற்ற பணத் திலிருந்து ராம் லட்சுமி அலுவலகத்தில் வைத்து 17 பேருக்கு  மட்டும் பணம் வழங்கியுள்ளனர். மேலும், 26 பேருக்கு ரூ.21  லட்சம் ரூபாய் வரை தரவேண்டிய நிலையில் பணம் தர  முடியாது என தெரிவிப்பதாகவும், இது குறித்து மாநகர காவல்  ஆனையர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பாதிக்கப்பட்ட மக்கள் தங் களை ஏமாற்றியவர்களிடமிருந்து பணத்தையும் வாங்கித் தர  கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகள்
முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு திருப்பூர், மார்ச் 11- அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகை யில் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளின் செயல்பாடு இருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்  திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட் டம், திருப்பூர், காமராஜ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டத்  தலைவர் சையது முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக  கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை  வெற்றி பெறச் செய்யும் வகையில் பணிகள்  மேற்கொள்வது, அதற்காக பொறுப்பாளர் கள் நியமிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்த சையது முஸ்தபா, அகில  இந்திய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம்  லீக் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்திருப் பதாகவும், அதன் அடிப்படையில் தமிழகத் தில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற முழு அர்ப்பணிப்போடு பணிபுரிய இருப் பதாகவும் தெரிவித்தார். திருப்பூர் மாநக ராட்சி, 45 ஆவது வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வரக்கூடிய நிலையில், தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் செயல்படுவதாகவும், 45 ஆவது வார்டை முற்றிலுமாக புறக்கணிக்கக்கூடிய வகை யில் இருப்பதாகவும் தெரிவித்தார். எந்த வொரு அடிப்படை வசதியும் 45 ஆவது வார்ட் டுக்கு செய்து தராமல் இருப்பதாக குற்றஞ் சாட்டினார். இதுகுறித்து மாநகராட்சி மேயர் அதி காரிகளுக்கு அறிவுறுத்தியும்கூட, அதிகா ரிகள் செவி சாய்க்காமல் செயல்பட்டு அர சுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிப்பா கவும் குற்றஞ்சாட்டினார். அதேபோல் 45 ஆவது வார்டு பகுதியில் உள்ள சத்தியா நகர்,  ஜம்ஜம் நகர் உள்ளிட்ட பகுதிகள் ஏழை எளிய  மக்கள் வாழக்கூடிய நிலையில், அதனை ஜோன் 1 என தரம் பிரிக்கப்பட்டு 100 சதவிகித வரி உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், இத னால் பொதுமக்கள் மிகப்பெரும் துயரத் திற்கு உள்ளாகியுள்ளனர். குப்பை வரி வசூ லிக்கப்படும் நிலையில் எந்தவொரு பகுதி யிலும் குப்பைகள் முறையாக அள்ளப்ப டுவதில்லை. கழிவுநீர் செல்ல தேவையான கால்வாய்கள் அமைக்கப்படாததன் கார ணமாக கழிவுநீர் நிலத்தடி நீராக மாறி பகுதி முழுவதுமே சுகாதார சீர்கேடாக மாறி வரு வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதியை மேம்படுத்திடுக

திருப்பூர், மார்ச் 11 - தாராபுரம் தலைமை தபால் நிலையத் தில், பயணிகள் ரயில் டிக்கெட்களை முன்ப திவு மற்றும் ரத்து செய்யும் சேவையை மேம்ப டுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தாராபு ரம் தாலுகா செயலாளர் என். கனகராஜ், தபால்  துறை உயர் அதிகாரிக்கு திங்களன்று அனுப் பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள  தலைமை தபால் அஞ்சல் நிலையம் காலை  7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்ப டுகிறது. ரயில் பயண டிக்கெட்களை பதிவு செய்வதற்காக தபால் அலுவலகத்திற்கு சென்றால் குறிப்பிட்ட ஒரு மணி நேரம் மட் டுமே காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை  மட்டுமே பதிவு செய்யப்படும் என்று சொல்கி றார்கள். ரயில் டிக்கெட் பதிவில் தவறு ஏற் பட்டு விட்டால் ரத்து செய்ய முடியாது என்று  கூறுகிறார்கள். ரயில் டிக்கெட் பதிவு மட் டுமே செய்யப்படும் என்று கூறுகிறார்கள். மேலும் எந்த ரயில், எந்த நேரம் என்பது பற்றிய  விவரம் எதுவும் சொல்வதில்லை. அது பற்றிய  எந்த விதமான தகவல் பலகையும் தபால்  நிலையத்தில் இல்லை. மேலும் பதிவு செய்த  டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னால், வெளியில் சென்று ஆறு மாதத் திற்குள் ரத்து செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் ரயில்  புறப்படுவதற்கு முன்னதாக டிக்கெட் கொடுத் தால் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்று கூறு கிறார்கள். ரயில் டிக்கெட் கவுண்டரில் இருக் கக்கூடிய ஊழியர்கள் இப்படி தவறான தக வல்களை சொல்கிறார்கள். எனவே இது  குறித்து தெளிவான தகவல்களை மக்க ளுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது குறித்து விசாரித்து எந்த நேரமும் ரயில் டிக் கெட் பதிவு செய்யவும், டிக்கெட்டை ரத்து  செய்யவும், உரிய முறையில் ஆவண செய்ய  வேண்டும். ரயில் நேர விவரங்களை தகவல்  பலகை மூலம் தெரியப்படுத்த வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

புகார் அளிக்க சென்றவரை தரக்குறைவாக பேசிய காவலர்: பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தில் தர்ணா

திருப்பூர், மார்ச் 11- தனியார் நிதி நிறுவனம் குறித்து புகார் அளிக்க சென்றவரை காவல் துணை ஆய்வா ளர் தரக்குறைவாக பேசி புகாரை ஏற்க மறுத் ததால் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார்.  திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் பகு தியை சேர்ந்த கருப்பசாமி தள்ளுவண்டி மூலம் நிலக்கடலை வியாபாரம் செய்து வந் துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கொமரலிங்கம் பகுதியில் உள்ள தனியார் நிதி  நிறுவனத்தாரிடம் இருந்து ஒரு லட்சத்து 23  ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை  சில மாதங்களாக கட்டி வந்த நிலையில், மூன்று மாதங்களாக வட்டித் தொகை கட்ட வில்லை என கூறப்படுகிறது. இதனிடையே நிதி நிறுவன ஊழியர்கள் கருப்புசாமியின் தள் ளுவண்டி, தள்ளுவண்டியில் இருந்த நிலக்க டலை மற்றும் எடை தராசு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட கருப்பு சாமி கொமர லிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க  சென்றபோது உதவி காவல் ஆய்வாளராக  பணியாற்றி வந்த மோகன் என்பவர் தரக் குறைவான வார்த்தைகளால் பேசியதோடு புகார் அளித்த கருப்புசாமியையும் அலட்சி யப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கருப்புசாமி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு  நீதி கேட்டு மகனுடன் தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த  போலீசார் கொமரலிங்கம் காவல் நிலையத் தில் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு.  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கருப்புசாமி  போராட்டத்தை கைவிட்டார்.

அவிநாசியில் நாற்காலி நாடகம்

அவிநாசியில் நாற்காலி நாடகம் அவிநாசி, மார்ச்.11 அவிநாசியில் தமுஎகச அவிநாசி கிளை  சார்பில் நாற்காலி  நாடகம் அறக்கேற்றப்பட்டது. ராஜநாராயணன் எழுதிய நாற்காலி கதையில், ராம்ராஜ்  நடித்து இயக்கிய, புகிரி அரங்காட்டம்  குழுவினர் அரங்கேற் றம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் அவிநாசி கிளை செய்தி ருந்தது. இந்நிகழ்வில் ஆவணப்பட இயக்குனர் சரவணனுக்கு  பாராட்டு விழா நடைபெற்றது. மேலும், பூபாலனின் நின் நெஞ்சு  நேர்பவள் என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது.  இதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்  சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், அவிநாசி  கிளை நிர்வாகிகள் சம்பத்குமார், தினகரன், மற்றும் பேராசி ரியர் மணிவண்ணன், நல்லது நண்பர் அறக்கட்டளை ரவிக்கு மார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சமூக மடத்திற்கு பட்டா வழங்கக் கோரிக்கை

சமூக மடத்திற்கு பட்டா வழங்கக் கோரிக்கை அவிநாசி, மார்ச் 11- அவிநாசியில் அருந்ததியர் சமூக மடத்துக்கு பட்டா மற்றும்  மின் இணைப்பு வழங்க வேண்டும் என அறக்கட்டளை நிர்வா கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில், அருந்ததியர் சமூக மடத்துக்கு வழங்கப் பட்ட 15 சென்ட் நிலத்தை அளவீடு செய்து, அவிநாசி வட்ட  அருந்ததியர் சமூக மடம் அறக்கட்டளை பெயரில் பட்டா  வழங்கி மின் இணைப்பு வழங்க வேண்டும். அவிநாசி வட்டத் துக்கு உட்பட்ட ஒரு நகராட்சி, ஒரு பேரூராட்சி மற்றும் 31 ஊராட் சிகளில் உள்ள அருந்ததியர் குழந்தைகள் பயன் பெறும் வகை யில் திறமை மிக்க ஆசிரியர்களை கொண்டு திறன் பயிற்சி  கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் மண்ணெண்ணெயுடன் வந்த பெண்

நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் மண்ணெண்ணெயுடன் வந்த பெண் ஈரோடு, மார்ச் 11- தனக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வைத் திருப்பதாக கூறி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு, மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண் ணால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம் தெற்கு தோட் டம் பகுதியைச் சேர்ந்தவர் சரோசா (60). இவர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுக்க வந்தார். அப்போது அவரை சோதனை செய்த போலீசார் அவர் கொண்டு வந்த பையை திறந்து பார்த்த னர். அதில், மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் இருப் பது தெரியவந்தது. உடனடியாக, பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்கையில், எனது கணவர் பெயர் குழந்தைவேல். அவர் இறந்து விட்டார். எனது அப்பா விற்கு சொந்தமான காடு, நிலம், வீடு ஆகியவற்றின் மீது  நான் வழக்கு தொடர்ந்திருந்தேன். இந்த வழக்கின் தீர்ப்பு, கடந்த 2019 ஆம் ஆண்டு எனக்கு சாதகமாக வந்தது. ஆனால், எனக்கு வர வேண்டிய இடத்தில், சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுதொடர்பாக,  2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்பி அலுவலகத் தில் மனு கொடுத்தேன். மறுபடியும் சித்தோடு காவல் நிலையத்தில் மனு கொடுத்தேன். எனது நிலத்தில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றி எனக்கு தருமாறு மனு அளித் திருந்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகள் கேட்டு மனு
அடிப்படை வசதிகள் கேட்டு மனு தருமபுரி, மார்ச் 11- மூக்கனூர் கோவில்மேடு கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி ஒன்றி யம், மூக்கனூர் கோவில்மேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தில் அதிக ளவில் ஏழை மக்களே வசித்து வருகின்றனர். இந்த குடும் பங்களில் பலர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரு கின்றனர். இதனிடையே, இக்கிராமத்திற்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. குறிப் பாக, குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளோம். குடிநீருக்காக விவசாய கிணறு களை நாட வேண்டியுள்ளது. மேலும், தெருவிளக்கு இல் லாதால், இக்கிராமமே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மக்கள் பயன்படுத்தும் சாலையிலேயே, கழிவுநீர் செல் லும் நிலை உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, எங்கள் கிராமத்திற்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துதர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

“ஒரு பொருள், ஒரு ரயில் நிலையம்” திட்டம்

இன்று துவக்கி வைப்பு சேலம், மார்ச் 11- சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 34 ரயில் நிலையங்களில் “ஒரு பொருள், ஒரு ரயில் நிலையம்” திட்டத்தை பிரதமர் மோடி செவ்வாயன்று (இன்று) துவக்கி வைக்கிறார். இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா சேலத்தில் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசுகை யில், பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று  (இன்று) நாடு முழுவதும் பல்வேறு திட்டங் களை துவக்கி வைக்கிறார். இதில், “ஒரு பொருள், ஒரு ரயில் நிலையம்” சேவையைத் தொடங்கி வைக்கும் பிரதமர், 10 வந்தே பாரத் ரயில்களின் சேவையையும் தொடங்கி வைக் கிறார். இதில், சேலம் ரயில்வே கோட்டத் திற்குட்பட்ட 34 ரயில் நிலையங்களில் “ஒரு பொருள், ஒரு ரயில் நிலையம்” திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஈரோடு  ரயில் நிலையத்தில் மக்கள் மருந்தகத்தினை யும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட கோவை, மொரப்பூர், ஈரோடு, கரூர், குன்னூர், நாமக் கல், சேலம், சின்ன சேலம், திருப்பூர், திருப் பத்தூர் ஆகிய இடங்களில் பிரதமரின் நிகழ்ச் சிகள் நேரலையில் காணொலி வாயிலாக ஒளி பரப்பப்பட உள்ளது என்றார்.  இப்பேட்டியின் போது சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், முதன்மை திட்ட மேலாளர் அனில்குமார், முது நிலை கோட்ட இயக்க மேலாளர் அனித் பிர காஷ், முதுநிலை கோட்ட வணிக மேலாளர்  பூபதி ராஜா, முதுநிலை கோட்ட ஒருங்கி ணைப்பு பொறியாளர் கார்த்திகேயன் ஆகி யோர் உடனிருந்தனர்.

பணிகளை இழுத்தடிக்கும் ஒப்பந்ததாரர்கள் 
கருப்புப்பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்

உதகை, மார்ச் 11- வார்டு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் இழுத்தடிக்கும் ஒப்பந்த தாரர்களை கருப்புப்பட்டியலில் சேர்க்க வேண் டும் என நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தி யுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகராட்சித் தலைவர்  வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.  நகராட்சி ஆணையர் ஏகராஜ், துணைத்தலை வர் ரவிக்குமார் முன்னிலை நடைபெற்ற கூட் டத்தில், உதகை நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அனைத்து நடைப்பாதை பகுதிகளி லும் செடிகள் ஆக்கிரமித்து பாதை தெரியாத அளவுக்கு உள்ளன. நகராட்சி வார்டுகளில் தெரு விளக்கு, பாதாள சாக்கடை அடைப்பு,  நடைபாதைகள் ஆகியவை முற்றிலும் சேதம் அடைந்து உள்ளன. மேலும் கழிவுநீர், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என  கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். மேலும்,  நகராட்சி பகுதியில் சில ஒப்பந்ததாரர்கள் நிதி  ஒதுக்கிய பணிக்கு, வேலை செய்யாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வருகின்ற னர். இதுபோன்ற ஒப்பந்ததாரர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத் தினர். இதைத்தொடர்ந்து, பேசிய ஆணையர்  ஏகராஜ், ஒதுக்கப்பட்ட பணிகளை செய்யா மல் இழுத்தடித்து வரும் ஒப்பந்ததாரர்களை கருப்புப்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பெட்ரோல் வாகனம் கேட்டு மாற்றுத்திறனாளி மனு

பெட்ரோல் வாகனம் கேட்டு மாற்றுத்திறனாளி மனு கோவை, மார்ச் 11- சுடும் தரையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளி, தனக்கு பெட்ரோல் வாகனம் வேண்டும் என மனு அளித்தார். தவழ்ந்து வந்த மாற்றுத்திறனாளிக்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உதவி செய்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று  வழக்கம் போல் குறைதீர் முகாம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் தங்களது கோரிக்கைக்கான மனுக்களை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். இதேபோன்று, காரமடை பகுதி யைச் சேர்ந்த சிவராமன்(80) என்ற வயதான மாற்றுத்திற னாளி ஒருவர் மனு அளிப்பதற்காக தரையில் தவழ்ந்து வந்தி ருந்தார். கோடைகாலம் தொடங்கிய நேரம் என்பதால் வெயி லின் தாக்கமும் அதிகமாகவே இருந்தது. இச்சூழலிலும், மாற் றுத்திறனாளி மிகுந்த சிரமத்துடன் தரையில் தவழ்ந்தபடி கையில் மனுவுடன் வந்திருந்தார்.இதனைப் பார்த்த போலீசார் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனத்தில் அவரை அமர வைத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.  இந்நிலையில், தனக்கு இரண்டு கால்களும் இல்லை. இத னால் எங்கும் செல்வதற்கும் சிரமமாக உள்ளது. எனவே, தனக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கக்கூடிய பெட் ரோல் வாகனம் கொடுத்தால், வாழ்வாதத்திற்கான தேவையை பூர்த்தி செய்து கொண்டு வாழ முடியும் என மனு அளித்தார்.  மேலும், கடந்த ஆறு மாத காலமாக ஆட்சியர் அலுவலகத் திற்கு வந்து கொண்டிருப்பதாகவும், எந்த விதமான உதவியும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.  மாற்றுத்திறனாளி தரையில் தவழ்ந்து வந்ததை பார்த்த பாதுகாப்பு பணிக் காவலர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனத்தின் மூலம், அவரை மனு நாள் நடக்கும் இடத்திற்கு  அழைத்துச் சென்றனர். பின்னர், மனுவை கொடுத்துவிட்டு, மீண்டும் அவரை பேருந்து நிலையம் வரைக்கும் போலீ சார் அழைத்துச் சென்று விட்டனர்.