உதகை, மே 20- உதகையில் கோடை விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிக ளுக்கு படகுப் போட்டி நடைபெற் றது. இதில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மலைகளின் அரசியான உத கைக்கு ஆண்டுதோறும் பல்லாயி ரக்கணக்கான சுற்றுலா பயணி கள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியிலும், சுமார் 35 லட்சம் பேர் இங்கு சுற்றுலா வந்து சென்றுள்ள னர். இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள் ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக, சுற்றுலாப் பயணிகளை கவர கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந் தாண்டுக்கான கோடை விழா கடந்த 7 ஆம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண் காட்சியுடன் தொடங்கியது. இதேபோல், சுற்றுலாப் பயணி களை உற்சாகப்படுத்த சுற்றுலா துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் படகு போட்டி வியா ழனன்று நடைபெற்றது. ரம்மிய மான சூழ்நிலையில் நடத்தப்பட்ட இந்தபோட்டியில், வெளி மாநிலங் கள் மற்றும் வெளி மாவட்டங் களைச் சேர்ந்த சுற்றுலா பயணி கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இதில், ஆண்கள் இரட்டையர் பிரி வில் கலந்துகொண்ட உதகையை சேர்ந்த பிரான்சிஸ்–கார்த்திக் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.இதேபோல், அம்ரித்- கார்த்திக் 2 ஆம் இடத்தையும், அமர்நாத்- கார்முகில் 3 ஆவது இடத்தையும் பிடித்தனர். இதேபோல், கலப்பு இரட்டை யர் பிரிவில் (தம்பதியினர் பிரிவு) கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பானுபிரியா-உமேஷ் இணையர் முதலிடம் பிடித்தனர். பூனேயை சேர்ந்த ஸ்ரீகணேஷ்-ருக்குஜா தம்பதி 2ஆம் இடமும், ராஜபாளையத்தை சேர்ந்த ராம கிருஷ்ணன்-சித்ராதேவி தம்பதி 3 ஆவது இடத்தையும் பிடித்தனர்.மகளிர் இரட்டையர் பிரிவில் உத கையைச்சேர்ந்த திரேசா-நந்தினி முதலிடமும், உதகைச் சேர்ந்த ப்ரீத்தி-கவுசல்யா 2 ஆவது இட மும், சென்னையை சேர்ந்த ஸ்வப்னா-லட்சிதா ஆகியோர் 3 ஆம் இடமும் பிடித்தனர். துடுப்பு படகு பிரிவில் உதகையை சேர்ந்த ராம்குமார் முதலிடமும், உதகை யைச் சேர்ந்த ஜார்ஜ் 2 ஆம் இட மும், உதகைச்சேர்ந்த கமலக் கண்ணன் 3 ஆம் இடமும் பிடித்த னர். இதைத்தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங் கப்பட்டது. இதில் சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர், உதகை படகு இல்ல மேலாளர் சாம்சன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.