districts

img

வாலிபர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

சேலம், மார்ச் 27- சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம் ஞாயிறன்று நடை பெற்றது. இந்திய விடுதலைப் போராட்ட மாவீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் 91 ஆவது நினைவு தினம் மார்ச் 23 ஆம் தேதி யன்று அனுசரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு மாந கர குழு சார்பில் ஞாயிறன்று ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்டோர் ஆர்வமாக கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு, வாலிபர் சங்க மாந கர தலைவர் பி. சதீஷ்குமார் தலைமை வகித்தார். இம்முகாமை சேலம் மாநக ராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன் துவக்கி  வைத்தார்.  இதில், மாநில தலைவர் என்.ரெஜீஷ்குமார், மாவட்ட தலைவர் பி.கந்தசாமி, மாநிலக்குழு உறுப்பி னர் எம்.ஜீவா, மாநகர செயலாளர் குருபிரசன்னா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, வடக்கு மாநகர செயலாளர் ந.பிரவீன்குமார், மாமன்ற உறுப்பினர்கள் ஜி.குமர வேல், சசிகலா, திமுக வார்டு செய லாளர் லோகநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொரு ளாளர் காஜாமைதீன், அரசு மருத்து வமனை ரத்த வங்கி மருத்துவ அலு வலர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.