districts

img

நடை மேம்பாலம் கேட்டு சாலை மறியல்

சேலம், அக் 21- சேலம் - கோவை தேசிய நெடுஞ் சாலையில், காக்காபாளையத்தில் நடை மேம்பாலம் மற்றும் ஆட்டையாம் பட்டி பிரிவு சாலையில் பேருந்து நிறுத் தம் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. சேலம் கோவை தேசிய நெடுஞ் சாலையில் காக்கா பாளையத்தில் உயர்  மட்ட மேம்பாலம் கடந்த சில மாதங்க ளுக்கு முன் செயல்பாட்டுக்கு வந்தது.  இதனால் வேம்படிதாளம் இளம் பிள்ளை காக்காபாளையம் கன்டர்கு ளம் மாணிக்கம் ஆட்டையாம்பட்டி உட் பட அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற் பட்ட கிராம மக்கள் சாலையை கடக்க  முடியாமல் கடும் அவதியடைந்து வரு கின்றனர். சாலையைக் கடப்பதற்கு நடை மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆட்டையாம் பட்டி பிரிவு சாலையில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த வேண் டும் என நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட  நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ள னர். இக்கோரிக்கையை மாவட்ட நிர்வா கம் கண்டு கொள்ளாதால், திங்களன்று  ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பதாக தெரிவித்த நிலையில் ஆவேசமடைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை யடுத்து, மகுடஞ்சாவடி போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களை கைது  செய்ய முற்பட்டதால் இருதரப்பின ருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.