districts

img

திருப்பூர் - தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி: அனைத்து கட்சிகளில் சார்பில் முற்றுகை போராட்டம்

திருப்பூர், பிப்.29- திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தாமலேயே, நெடுஞ்சா லைத்துறையினர் திருப்பூர் - தாராபு ரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி திறப்பதாக அறிவிப்பு வெளி யிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றி யக்குழு செயலாளர் ஆர்.பாலு கூறி யதாவது, திருப்பூர் - தாராபுரம் தேசிய  நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேலம்பட்டி சுங்க சாவடி செயல்ப டுத்த கூடாது என கடந்த நான்கு ஆண் டுகளாக அப்பகுதியில் உள்ள அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினார். இதையடுத்து சுங்கச்சாவடி அமைக் கப்படாது என மாவட்ட ஆட்சியர் உறு தியளித்தார்.  இந்நிலையில் வரும் மார்ச் 1  தேதி முதல் வேலம்பட்டி சுங்க சாவடி  திறக்கப்பட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டால் நெடுஞ்சாலைத்துறையினர் மாவட்ட  நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தா மலேயே சுங்கச்சாவடி திறப்ப தாக அறிவித்துள்ளதாக தெரிவித் துள்ளனர். இதையடுத்து வியாழ னன்று அனைத்துக் கட்சிகள் சார்பில்  சுங்கச்சாவடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை  சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. எனினும்  மாவட்ட அளவில் குழு அமைப்பதாக வும், அதுவரை சுங்கசாவடி செயல்ப டாது என்று தெரிவிக்கப்பட்டது.