districts

img

குடிநீர் கேட்டு விதொச தலைமையில் முற்றுகைப் போராட்டம்

சேலம், மார்ச் 5- குடிநீர் வழங்காத ஒன்றிய நிர்வா கத்தைக் கண்டித்து, அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தின் தலை மையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தும்பிப்பாடி கிராமம், ஒட்டதெரு பகுதி யில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியி ருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு கடந்த ஆறு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனைக் கண் டித்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு  சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டும், தும்பிப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் ஓம லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக் கள் அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் தலைமையில் செவ்வா யன்று ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு காலிக்குடங்களுடன் முற் றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய தொழிலாளர் சங்க செயலா ளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.கணபதி, மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர், துணைத்தலைவர் சின்ன ராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.