districts

img

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள கூலியை வழங்க கோரி முற்றுகை

திருப்பூர், நவ.6- தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத் தில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்குக் கடந்த மூன்றுமாத காலமாக  சம்பளம் வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தினர் உடுமலைப் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எம்.ரங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத் தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்றுமாத காலமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அதை உட னடியாக வழங்க வேண்டும். தொடர்ச்சி யாக வேலை வழங்க வேண்டும் என பெண்கள் உட்பட 950க்கும் மேற்பட் டோர் பங்கேற்று முழக்கமிட்டனர். இதில், கோரிக்கைகளை விளக்கி மாவட்டச்செயலாளர் எ.பஞ்சலிங்கம், உடுமலை ஒன்றியச்செயலாளர் கி.கன கராஜ், குடிமங்கலம் செயலாளர் என். சசிகலா, சிஐடியு செயலாளர் எஸ்.ஜெக தீசன், ஒன்றிய குழு எஸ்.சக்திவேல் ஆகி யோர் பேசினர். இதைதொடர்ந்து, வட் டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணி யிடம் மனு அளித்தனர். இரண்டு நாட்க ளில் சம்பளம் வழங்கவும், தொடர்ந்து  வேலை வழங்குவதாக. உறுதியளித் தார்.