districts

img

நூல் விலை உயர்வைக் கண்டித்து போர்வை உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

ஈரோடு, ஏப்.7- கடுமையாக உயர்ந்துள்ள நூல் விலையை குறைக்க வேண்டும் என  வலியுறுத்தி சென்னிமலையில் போர்வை உற்பத்தியாளர்கள் வேலை  நிறுத்தத்தில் ஈடுபட்டனர். போர்வை உற்பத்திக்கு புகழ் பெற்ற ஈரோடு மாவட்டம், சென்னி மலையில் நூற்றுக்கணக்கான விசைத் தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை சார்ந்து தறி ஓட்டுதல், பாவு பிணைதல், நூல் சுற்றும் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மற்ற நூல் களை போலவே, போர்வை உற்பத்திக் கான நூல் ரகங்களின் விலையும் கணிச மாக உயர்ந்து வருகிறது. கடந்த 2 மாதத் தில் மட்டும் நூல் விலை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து நூலின்  விலை அதிகரித்து வருவதால், அதற் கேற்ப உற்பத்தி செய்யப்படும் போர்வை ரகங்களை விற்பனை செய்ய முடியாமல் விசைத்தறியா ளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நூல் விலையை உயர் வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, சென்னிமலை வட்டார விசைத்தறி உரி மையாளர்கள் வியாழனன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒன்றிய, மாநில அரசுகள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால், நிரந்தரமாக விசைத்தறி தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என விசைத்தறியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.