உடுமலை, ஜன.17- ஜெயின் இரிகேசன் சிஸ்ட்ம்ஸ் லிட் நிறுவனத்தின் தொழிலாளர் களை பழிவாங்கும் நடவடிக் கையை கண்டித்து 22 ஆவது நாளாக தொழிலாளர்கள் உள்ளி ருப்பு போராட்டத்தை தொடர்ந் தன. திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா ஏலையமுத்தூர் பகுதியில் ஜெயின் இரிகேசன் சிஸ்டம்ஸ் லிட் என்ற விவசாய பொருள்கள் தயா ரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. இந்நிறுவனத்தில நூற்றுக் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காம லும், தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்தாமலும் நிர்வாகம் அலட்சியம் காட்டி வந் தது. இதைத்தொடர்ந்து சிஐடியு தொழிற்சங்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது உரிமைகளை மீட்டெடுத்தனர். இதனால் எரிச்சலடைந்த ஆலை நிர்வாகம், தொழிலாளர்களை பழி வாங்கும் நோக்கில் தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட 29 தொழிலா ளர்களை வெளிமாநிலங்களுக்கு பணிமாறுதல் செய்துள்ளது. இதனை கண்டித்து அங்கு பணியாற் றும் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் பணி களை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இப்போராட்டம் 22 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. குறிப் பாக, தமிழர் திருநாளான பொங் கல் பண்டிகையை உலகமே கொண் டாடிய நிலையில், ஜெயின் இரிகே சன் ஆலை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டும் அந்நாள் கருப்பு பொங்க லாக கடந்து போயியுள்ளது. ஆகவே, ஆலை நிர்வாகத்தின் பழிவாங்கும் போக்கிற்கு எதிராக உறுதியுடன் களம் கண்டு வரும் தொழிலாளர்களின் போராட்டத் திற்கு தீர்வு கிடைக்க மாநில தொழி லாளர் நலத்துறை உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக் கைகள் எழுந்துள்ளன.