districts

img

பேனர் கலாச்சாரம்: ஊருக்குத்தான் உபதேசமா?

திருப்பூர் ஜூலை 13- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும்  ஞாயிறன்று பாஜக எட்டாண்டு சாதனை (வேதனை?!) விளக்கக் கூட்டம் நடத்துகி றது. இந்நிகழ்வைப் பற்றி மாவட்டம் முழு வதும் பல இடங்களில் சுவர் விளம்பரங்கள்,  பேனர்கள் மற்றும் பதாகைகள் சாலையோ ரங்களில் வைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வைத்திருக்கும் பகுதிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் முறையான அனுமதி பெற்றுத்தான் பேனர்கள் வைக் கப்பட்டுள்ளதா என்ற  சந்தேகத்தை எழுப் பிள்ளது.  இந்நிலையில் திருப்பூர் பெருமாநல்லூர் சாலை மில்லர் பேருந்து நிறுத்தம் அருகில் வைக்கப்பட்டுள்ள பாஜகவின் பேனர் முறிந்து சாலையில் விழுந்து கிடந்தது. அதன்  கீழேயே பூட்டு சரி செய்பவர் வேலை செய்து  கொண்டிருந்தார். நல்வாய்ப்பாக யாருக்கும்  பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. போக்குவ ரத்து நெருக்கடி மிகுந்த இடத்தில் பேனர் முறிந்து கிடந்தது குறித்து அந்த பேனரில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் ணிற்கு அழைத்து தகவல் தெரிவித்தும் பாஜக வினர் முறையாக பதில் அளிக்கவில்லை. பல  மணி நேரம் பேனர் சாலையிலேயே கிடந் தது, அந்த பாதையில் செல்வோருக்கு இடை யூறு ஏற்படுத்துவதாக இருந்தது என்று சாலை யோர வியாபாரிகள் தெரிவித்தனர்.

பேனர் கலாச்சாரம் :

கட்சியின்  உயர் மட்ட தலைவர்களை கவர் வதற்காக தொண்டர்கள் தங்களின் தலைவர் களின் உருவம் பதிந்த பேனர்களை சாலையோ ரங்களில் எந்த விதமான அனுமதியும் பெறா மல் வைக்கிறார்கள். இதனால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு சில  நேரங்களில் விபத்துக்கள் நிகழ்ந்து உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. 2017 ஆம் ஆண்டு திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந் தியா வந்திருந்த ரகுபதி (32)   மென்பொறியாளர் அதிமுக நிறுவனத் தலை வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மோதி கோவையில் உயிரிழந்தார். இதைய டுத்து  இது போன்ற பேனர்களால் ஏற்படும்  அபாயங்கள் பற்றிய பிரச்சனை முன்னிலைப் படுத்தப்பட்டு பேசப்பட்டது. அதே ஆண்டு (2017) சென்னை உயர்நீதிமன்றம் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் பேனர்கள் வைக் கப்படுவதால், போக்குவரத்துக்கு இடையூறு  ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று சாலை ஓரங்களில் பேனர் வைக்க தடைவி தித்து உத்தரவு பிறப்பித்தது.  2019 ஆம் ஆண்டு அதிமுக பிரமுகர் தந் தையின் படத்திறப்பு விழாவிற்கு வருகை  தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல் வத்தை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்து 23 வயது மதிக்கத்தக்க சுபஸ்ரீ  என்ற பெண் உயிரிழந்தார். இதையடுத்து சுபஸ்ரீயின் வழக்கில் குறிப் பிடும்போது சென்னை உயர்நீதிமன்றம் சட்ட விரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள்  வைப்பதற்கு தடை விதித்ததும். அதிகாரி களின் அக்கறையின்மையால் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதாக கண்டனம் தெரி வித்தது. அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டா லின் தனது வன்மையான கண்டனங்களை தெரிவித்ததோடு, திமுக ஆட்சியில் பேனர்  கலாச்சாரம் ஒழிக்கப்படும் என்று தெரிவித் தார். அவரது அறிவிப்பையும் மீறி அவரது கட்சியினர் கடந்த ஆண்டு பேனர் வைத்த நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 13  வயது சிறுவன் உயிரிழந்தார்.  சட்டத்தை மதிப்பதாக கூறும் பாஜக தனது  பங்கிற்கு சாலை ஓரங்களில் போக்குவரத் துக்கு இடையூறு ஏற்படும் வகையில் திருப் பூர் மாவட்டத்தில் பேனர்களை வைத் துள்ளது. பலமான காற்று வீசும் மாதமாக  இருக்கும் நிலையில், பல பகுதிகளில் வைக் கப்பட்ட இதுபோன்ற பேனர்கள் விழுந்துள் ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மற்றவர் களைக் குறை சொல்வதோடு, அது தங்க ளுக்கு பொருந்தாது என்றரீதியில் பாஜக வின் செயல்பாடு அமைந்துள்ளது. (ந.நி.)