திருப்பூர், மார்ச் 6 – வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படு வதாக சமூக ஊடகங்களில் பொய்த் தகவ லைப் பரப்பி பதட்டத்தை ஏற்படுத்திய பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவை திருப்பூர் மாநகர காவல் துறை கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தொழிற்சங் கங்கள் வலியுறுத்தி உள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டம் திங்களன்று அவிநாசி சாலையிலுள்ள சிஐடியு அலுவல கத்தில், பனியன் தொழிலாளர் சங்க (சிஐடியு) தலைவர் சி.மூர்த்தி தலைமையில் நடை பெற்றது. இதில் சிஐடியு பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், ஏஐடியுசி பனி யன் சங்கப் பொதுச் செயலாளர் என்.சேகர், பொருளாளர் எஸ்.செல்வராஜ், செயலாளர் ஆர்.செந்தில்குமார் எல்பிஎப் பனியன் சங்கத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியம், பொருளா ளர் பூபதி, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் அ. சிவசாமி, எம்எல்எப் பனியன் சங்கச்செயலா ளர் மனோகரன், எம்எல்எப் மாவட்ட செயலா ளர் மு.சம்பத், எச்எம்எஸ் பனியன் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட மாநில தொழிலாளர்களை தமிழர் கள் தாக்குவதாக சில சமூக விரோத, தேச விரோத சக்திகள் பொய்யான வதந்திளை திட்டமிட்டு சமூக ஊடகங்களில் பரப்பிய தால், அந்த தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமானவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர் பாளர் பிரசாந்த் உமாராவ் என்பது வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. அந்த நபர் வெளி யிட்ட பொய்யான செய்தியின் காரணமாக திருப்பூரில் அமைதியாக வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள், தமிழ் நாட்டைச் சார்ந்த தொழிலாளர் மத்தியில் மன அழுத்தத்தையும், பெரும் அச்சத்தை யும் ஏற்படுத்தி உள்ளது
இதனால் திருப்பூர் தொழிலும், சமூக அமைதியும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. இத்தகைய பதட்டத்தை ஏற்படுத் துவதற்கு காரணமாக பொய் செய்திகளை வெளியிட்ட பாஜக செய்தி தொடர்பாளர் பிர சாந்த் உமாராவ் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண் டும். இது குறித்து அனைத்து சங்கங்களின் சார்பில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சந்தர்ப்பவாத மதவெறி அமைப்புகள் மேலும் இது போன்ற தவறுகள் நடக்கா மல் இருப்பதற்கும், அச்சத்தில் இருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்ப டுத்துவதற்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும். திருப்பூரில் ஜனவரி 14-ல் ஒரு டீ கடையில் நடைபெற்ற ஒரு சம்ப வத்தை குறித்து உண்மைக்கு மாறாக, தமி ழர்களை வட மாநிலத்தவர்கள் அடிக்கிறார் கள் என்று மதவெறி அமைப்பினர் அறிக்கை விட்டனர். தற்போது வட மாநிலத்தவர்களை தாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவ்வாறு மென்மேலும் பதட்டத்தை ஏற்ப டுத்தும் மதவெறி அமைப்புகளின் அறிக்கை, சமூக விரோதிகளை ஊக்கப்படுத்தி, திருப்பூ ரில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவ தற்கு அதுவே காரணமாக அமைந்து விடும். இந்த பேராபத்து உள்ளதால், அத்தகைய அமைப்புகளின் நடவடிக்கையை வன்மை யாக கண்டிப்பதோடு, பொய்யான செய்தி களை பரப்பி வரும் இத்தகைய அமைப்புகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.