பாஜகவின் ஒன்பது ஆண்டுகால ஒன்றிய ஆட்சியில் இந்திய மக்கள் சொல் லெண்ணா துயரத்தில் உள்ளனர். இந்திய வளங் கள் அனைத்தையும் அம்பானி, அதானிகள் ஒட்டச்சுரண்டிடும் வகையில் வழிவகைகள் மோடி தலைமையிலான ஆட்சி ஏற்படுத்தியிருக் கிறது. சிறுகுறு தொழில்கள் துவங்கி நடை பாதை கடை வியாபாரம் உள்ளிட்டு அனைத்தும் ஸ்தம்பித்துக்கிடக்கிறது. மக்கள் கையில் பணம் இல்லாததால் சந்தையில் வியாபாரம் இல்லை என உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் குடோன் களில் தேங்கிக்கிடக்கிறது. கல்விக்கடன் பெற் றவன் வீட்டின் கதவை பிடுங்கச்செல்லும் அதி காரிகள், அதானி வைகயாறாக்களுக்கு லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படு கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பதில்லை, பேச வேண்டிய பிரதமர் மோடியோ நாடாளுமன்ற அவைக்கே வருவ தில்லை. வறுமையும், வேலையின்மையும், விலைவாசி உயர்வும் இந்திய மக்கள் மீது கொடூர தாக்குதலை தொடுத்து வருகிறது. இத்தகைய மக்கள் விரோத மோடி தலைமை யிலான பாஜக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் செப்.7 ரயில் மறியல் போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத் துள்ளது. இதன்தொடர்ச்சியாக, தமிழக மக்களிடம் மார்க்சிஸ்ட் கட்சி இப்போராட்டத்தின் அவசியம் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி வரு கிறது. இப்பிரச்சாரத்தின் ஊடே மக்கள் கருத்தை அறிய சென்றபோது, கடுகு டப்பாவுல கூட காசு சேமிக்க முடியல, கொரோனாவே பரவா யில்லை அவ்வளவு கஷ்டம் இந்த மோடி ஆட்சி யில் என வெளிப்படையாக மக்கள் பேசு கிறார்கள்.
ராஜேஸ்கண்ணன் வி.ஜி.பாளையம் தருமபுரி
நான் பொறியியல் பட்டதாரி, மோடி ஆட்சிக்கு வந்த உடன் படித்த இளைஞர் களுக்கு வேலை தருவதாக சொன்னார். எந்த வேலையும் தரவில்லை. இவர் களுக்கு நாட் டின் மீதும் அக் கறையில்லை, தமிழகத்தின் நலனின் மீது சுத்தமாக அக் கறையில்லை என்பது அப்பட்ட மாக தெரிகிறது. அரசுத்துறையில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. தனியார் நிறுவனங் களில் மிகவும் குறைவான சம்பளம் தருவதோடு எந்த பணிபாதுகாப்பும் இல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் வேலையே விட்டு துரத்திவிடு கின்றனர். மோடி அரசு கொடுத்த எந்த வாக்குறுதி யையும் நிறைவேற்றவில்லை.
காவேரியம்மாள் தருமபுரி ஒன்றியம் பிடமனேரி
எனது கணவர் கூலி வேலை செய் கிறார். நான் நூறு நாள் வேலைக்கு செல்கிறேன். குடிசை வீட்டை இடித்து விட்டு சிறுவீடு கட்டலாம் என பணம் சேமித்து வைத் திருந்தோம். கொரோ னா வந்தது வேலை இல்லாமல் வீட்டில் இருந்தோம் வரு மானம் இல்லாமல் குடும்பம் நடத்தியதால், கையில் வைத்திருந்த இருப்பு முழுவதும் காலியாகிவிட்டது. இப்போது அனைத்து விலை யும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் எங்கள் வயிற்றை கழுவுவதற்கே சரியாக உள்ளது. அப்புறம் எப்படி வீடுகட்டு வது, மழை வந்தால் வீடு முழுவதும் ஒழுகுகிறது. ஒரு பைசாவைக்கூட சேமிக்க முடியவில்லை.
கோவிந்தராஜ் - தருமபுரி.
எனக்கு சொந்த வீடோ, நிலமோ, இல்லை. நான் வாடகை வீட்டில் குடியிருந்து வரு கிறேன். சலவை தொழில்செய்துவரும் எனக்கு தினமும் ரூ. 250 கிடைக்கிறது. இதில், கடைவாடகை போக மீதம் இருப்பது மிக சொற்பமானது. ஒரு கிலோ அரிசி ரூ. 30 க்கு விற்றது தற் போது ரூ.50க்கு குறை வாக இல்லை. விலைவாசி உயர்வினால் உணவு பொருட்கள் வாங்க முடியிவில்லை. தினமும் சாப்பிடுவதற்கே திண்டாடும் நாங்கள் வாடகை வீட்டிலேயே வாழ்ந்து வாடகை வீட்டிலேயே வாழ்க்கை முடிந்து விடும் நிலை தான் உள்ளது.
உமா சவுளுப்படி, தருமபுரி
நான்கூலி வேலை செய்கிறேன் எனது கணவரும் கூலி வேலை செய்துவரு கிறார். எனது குழந் தைகள் அரசு பள்ளி யில் படிக்கின்றனர். இப்போது உள்ளது எப்போதும் இந்த அளவிற்கு விலை வாசி இருந்தது இல்லை. கடுமையாக உயர்ந்துள்ளது 25 ரூபாய்க்கு விற்ற சோப்பு 40 ரூபாய்க்கு விற் கிறான். ஒரு கிலோ பீன்ஸ் 80 ரூபாய் உழவர் சந்தையிலே விற்கிறது. எண்ணெய் பருப்பு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. நான் பேசு வதற்கு ஒரு மாசத்துக்கு 30 ரூபாய்க்கு செல் லுக்கு ரீசார்ஜ் செய்வேன். இன்றைக்கு 155 ரூபாய் இல்லாம ரீசார்ஜ் செய்ய முடியாது. 600 ரூபாய் கேஸ் இன்னைக்கு 1200 ரூபா கொடுக்கவேண்டும். மானியம்ன்னு சொன் னாங்க அதுவும் வரதில்லை. பருப்பு ரூ 50க்கு கிடைத்து தற்போது ரூ 120 உயர்ந்துள்ளது. நாங்க குறைவான கூலியில் இரணடு பேர் சம்பாதித்தாலும் குடும்பத்தை நடத்துவதே குதிரைக் கொம்புதான் என்றார்.
வேல்முருகன் - தருமபுரி
தருமபுரி நக ரத்தில் செருப்பு தைக்கும் வேலை யில் உள்ளேன். எங்கள் குடும்பத் தில் புதிய துணி எடுக்க முடிய வில்லை. எங்கள் குழந்தைகளை அரசு பள்ளியி லேயே படிக்கிறார் கள். இவர்களுக்கு கூட எங்களால் செலவுசெய்யமுடியவில்லை. விலைவாசி உயர்வினால் நாங்கள் கடனா ளியாகி விட்டோம். உழைப்பதை கடன் கட்டவே சரியாக உள்ளது.கடனில் இருந்து எங்களால் மீள முடியவில்லை என்றார்.
சிவகுரு - நல்லம்பள்ளி ஒன்றியம்
நான் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு வேலை கிடைக்கவில்லை 10 வருஷமா ஆட் டோ ஓட்டிட்டு வரேன். 40 ரூபாய் க்கு விற்ற டீசல் தற்போது 100 ரூபாய் வந்துடுச்சி நாங்க சம்பாதிப்பதில் பாதி டீசலுக்கே கொடுத்து விடுகிறேன். வருடத்துக்கு ஒரு முறை எப்சி காட்டனும், வண்டிக்கு இன்சூரன்ஸ் கட்டுகிறோம். வண்டி சர்வீஸ் பண்ண ஸ்பேர் பாட்ஸ் விலையை காட்டிலும் ஜிஎஸ்டி அதிகம். ஜிஎஸ்டி கடுமையாக உயர்ந்துள்ளது.எங்களால் வேறு தொழிலும் செய்யமுடியவில்லை. வாழ வழியின்றி தவிக்கிறோம் என்றார்.
ஜெனிதா - ஊட்டி
மத்திய அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக் குறுதிகள் எத னையும் நிறைவேற்ற வில்லை. விலைவாசி கடுமையாக உயர்ந்துள் ளது. இப்போது டோல்கேட் கட்டண உயர் வின் காரணத்தினால், அனைத்து அத்தியா வசிய பொருட்களின் விலை மேலும் உயரும். எங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி உள்ளது என்றார்.
மத்திய அரசு சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்துள்ளனர். வரும், லோக்சபா தேர்தலை மனத்தில் வைத்துத்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். சிலிண்டருக்கான மானி யம் கூட வழங்காமல் மக்களை ஏமாற்றிய வர்கள் இவர்கள். இனி மோடி அரசின் அறி விப்பை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். தொகுப்பு - லெனின் தருமபுரி