கோவை, அக்.27- கார் வெடிப்பு சம்பவம் தொடர் பாக பாஜக தலைவர் அண்ணா மலையிடம் முதலில் என்ஐஏ விசாரிக்க வேண்டும். இச்சம்ப வத்தை பாஜக அரசியலாக்கப் பார்க்கிறது என அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தெரிவித்துள் ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் துக்கு பின்னர் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் கடந்த அக்.23 ஆம் தேதியன்று கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல் துறை சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தமிழக டிஜிபியும் கோவைக்கு வந்து விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் அந்த கார் விபத்தில் உயிரிழந்தவர் தொடர்பான முழு விவரம் கண்டுபிடிக்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த சம்பவத்தை பாஜக அரசியல் ஆக்க முயற்சி செய்து வருகிறது. பாஜக தலைவர் அண்ணா மலை உண்மை தன்மை தெரி யாமல் பேசி வருகிறார். காவல் துறை இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வரும் நிலை யில், உண்மை தன்மையை வெளி யிடுவதற்கு முன்பு பதட்டத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற நோக்கில் அண்ணாமலை இந்த வழக்கு சம்பந்தமாகப் பேசியுள்ளார். எனவே, அவருக்கு இந்த ஆதா ரங்கள் எப்படிக் கிடைத்தது? எதனடிப்படையில் அவர் வெளி யிட்டார்? என்பது தொடர்பாக என்ஐஏ முதலில் அவரிடம் தான் விசாரணை நடத்த வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக வெளி மாநிலம் கடந்து விசாரணை நடத்த உள்ளதால், தமிழக முதல்வர் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால், தாங்கள் கூறியதனால் தான் என்ஐஏ விசார ணைக்குப் பரிந்துரை செய்யப் பட்டது என பாஜகவினர் கூறி வரு கின்றனர்.
இந்த சம்பவத்தை அரசிய லாக்க நினைக்கும் பாஜக, இந்திய முன்னாள் முப்படை தலைமை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது வந்து மரியாதை செலுத்தினார்களா என்றால் இல்லை. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவும், நாடா ளுமன்றத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தான் பாஜக வினர் இப்படி செய்கின்றனர் என்றார்.
பாஜக அறிவித்துள்ள பந்த் தொடர்பான கேள்விக்கு, சட்டத் துக்கு புறம்பாக கடைகளை அடைக்கச் சொன்னாலோ, மிரட்டி னாலோ, மக்களை துன்புறுத்தி னாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும். கோவையில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படவில்லை. தமிழகத்தில் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. விசாரணை நடக்கும் பட்சத்தில் மற்ற கட்சியினர் விசா ரணை நடத்தி உண்மை குற்றவாளி களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கின்றனர். அதன்படி நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையும், தற்போது நடந்த நிகழ்வையும் ஒப்பிட்டு சமூகவலை தளங்களில் பலர் அவதூறுகளைப் பரப்பி, பதட்டத்தை ஏற்படுத்தி வரு கின்றனர். உண்மைக்கு மாறாக சமூக வலைத்தளங்களில் அவ தூறு கருத்துக்களைப் பரப்பி வரும் நபர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும். பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளைப் பார்க்கும் பொழுது அடிப்படை அரசியல் பக்குவமற்றவர் என்பதைக் காட்டு கிறது என்றார். இந்த பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் பால கிருஷ்ணன், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், ஆணையாளர் மு. பிரதாப் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.