districts

இடுவாய் கிராமசபையில் பாஜகவினர் குழப்பம் ஏற்படுத்த முயற்சி

திருப்பூர், அக். 3 – அக்டோபர் 2ஆம்  தேதி காந்தி ஜெயந்தி அன்று இடுவாய் ஊராட்சி கிரா மசபைக் கூட்டத்தில் குழப்பம் விளை விக்க முயன்ற பாரதிய ஜனதா கட்சியி னர் மீது ஊராட்சி நிர்வாகம் மங்கலம்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளது. திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியின் கிராமசபைக் கூட்டம்  ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன்  தலைமையில் ஆட்டையம்பாளையம் ஆரம்பபள்ளி அருகே உள்ள வளாகத் தில் திங்களன்று நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பரமசிவம், வார்டு உறுப்பினர் கள் ஆர்.ஈஸ்வரி, பி.ஈஸ்வரி, பூவதி  பிரகாஷ், எம்.கணேசன், சுப்பிரமணி யன் மற்றும் அதிகாரிகள், பொது மக்கள்  கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இடுவாய் ஊராட்சி யில் கிணற்றுத் தண்ணீரை வணிக நோக்கத்திற்காக விற்கக் கூடாது என தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமி ழக அரசின் நலத்திட்டங்களை விளக் கும் காணொலியை ஒளிபரப்பியபோது இடுவாய் பகுதி பா.ஜ.கட்சியைச் சேர்ந் தோர் முதல்வர் பேசும் காணொலியை ஒளிபரப்பக் கூடாது என எதிரப்பு தெரி வித்து இடையூறு ஏற்படுத்தினர். இத னால் சிறிது நேரம் பரபரப்பு நிலவி யது. ஆனால் அவர்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், தமிழக அரசின் நலத் திட்டங்களை விளக்கும் காணொலி ஒளிபரப்பப்பட்டது.  பின்னர் இடுவாய் ஊராட்சி நிர்வா கம் சார்பில் மங்கலம் காவல் நிலையத் தில் தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் காணொலியை கிராமசபை கூட்டத்தில் ஒளிபரப்ப இடையூறு ஏற்ப டுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டது.