திருப்பூர், மார்ச், 25- வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பா ளருடன் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக் கப்பட்டு வந்த நிலையில், பாஜகவினர் 10க்கும் மேற்பட்டோரை அனுமதிக்க கோரி போலீஸாருடன் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். முன்னதாக தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு திருநீறு பட்டை அணிவித்தது சர்ச்சையை ஏற்ப டுத்தியது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்க உள்ளது. இதை யொட்டி, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தி ருந்தனர். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் கே.சுப்பராயன் மனுத் தாக்கல் செய்தார். இதில், மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திமுக திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், இந்திய தேசிய காங்கிரஸ் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் போட்டியி டும் அருணாச்சலம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இவருடன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண் ணன், எம்.எஸ்.எம் ஆனந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், விஜயகுமார் ஆகியோர் வந்திருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டுச் சென்றனர். சர்ச்சையைக் கிளப்பியே பாஜகவினர்: இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய முருகானந்தம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, அவருடன் வந்த பாஜகவினர் பத்துக்கும் மேற் பட்டோர் தங்களையும் உள்ளே விட வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்வ தற்கும் முன் தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு சென்ற பாஜகவினர் தியாகியின் நெற்றி யில் திருநீறு பட்டை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்த முயன்றனர்.