திருப்பூர், ஜூலை 22 - மணிப்பூரில் நடக்கும் காட்டுமிரா ண்டித்தனமான வன்கொடுமைகளை வேடிக்கைப் பார்க்கும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், உடனடியாக அங்கு அமைதியை நிலைநாட்ட நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாராபு ரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாராபுரம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் அண்ணாசிலை முன்பு இந்த ஆர்ப்பாட்டம் என்.முத்துச் சாமி தலைமையில் நடைபெற்றது. இதில், மணிப்பூர் மாநிலத்தில் பழங் குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய படு பாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளி களை கைது செய்ய வேண்டும். கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவ றிய மணிப்பூர் மாநில பாஜக முதல மைச்சர் பதவி விலக வேண்டும். ஒன் றிய அரசு வேடிக்கை பார்க்காமல் உட னடியாக மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண் டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங் கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலூக்காச் செயலாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பி.பொன்னுச்சாமி, மேகவர்ணன், ராஜேந்திரன், கண்ணு சாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
உடுமலைபேட்டை
உடுமலை மத்திய பேருந்து நிலை யத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சி யின் உடுமலை நகரக்குழு உறுப்பி னர் ஜஹாங்கீர் தலைமையில் மணிப் பூர் சம்பவத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் சனியன்று நடைபெற் றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் எஸ்.ஆர்.மதுசூதணன், மாவட் டக்குழு உறுப்பினர் அ.பஞ்சலிங்கம், நகரச் செயலாளர் தண்டபாணி மற்றும் சிஐடியு, மாதர் சங்கம், வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து, கொண்டு பாஜக அரசுக்கு கண்டணம் தெரிவிக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பினர்.
திருப்பூர்
திருப்பூர் தியாகி குமரன் நினைவ கம் முன்பாக சனியன்று மாலை மாதர், வாலிபர், மாணவர் இயக்கங்கள் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட் டத் தலைவர் எஸ்.பவித்ராதேவி தலைமை வகித்தார். இதில் இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைத் தலை வர் தௌ.சம்சீர் அகமது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ச.நந்தகோபால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண் டன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கப் பெண்கள், வாலிபர், மாணவர் சங்கத்தினர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்தவர்கள் என பல நூறு பேர் பங்கேற்று பாஜக அரசை எதிர்த்து கண்டனம் முழங்கி னர்.
வெள்ளியங்காடு
மணிப்பூரில் பழங்குடி இனப்பெண் களை நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகரம் வெள் ளியங்காடு நால் ரோட்டில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டம் நடத்தினர். வாலிபர் சங்க தெற்கு மாநகர துணைத் தலைவர் வாசு தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், தெற்கு மாநகரச் செயலாளர் த.நவீன் லட்சுமணன், மாற் றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலை வர் டி.ஜெயபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப் பினர் ம.ஜீவா உள்பட வாலிபர் சங்கத்தி னர் பங்கேற்றனர். நிறைவாக மாவட்டக் குழு உறுப்பினர் பி.பவித்ரா நன்றி கூறி னார்.
ஊத்துக்குளி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஊத்துக்குளி வட்டம், பல்ல கவுண்டம்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் சனியன்று பல்லகவுண் டன்பாளையம் கிளைச் செயலாளர் கே. கண்ணையன் தலைமையில் நடை பெற்றது. கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, தாலுக்கா குழு உறுப்பினர்கள் வி. காமராஜ், க.பிரகாஷ், சிஐடியு மாவட்டத் துணை செயலாளர் ஜெ.கந்தசாமி ஆகி யோர் கண்டன உரை ஆற்றினார்கள். மாதர் கிளை செயலாளர் மீரா லட்சுமி, இன்ஜினியரிங் சங்கத் தலைவர் ஆர். பழனிசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
காங்கேயம்
மணிப்பூர் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி காங் கேயம் பேருந்து நிலையத்தில் சனி யன்று காலை கண்டன போராட்டம் நடைபெற்றது. புரட்சிகர இளைஞர் முன்னணி சார் பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போ ராட்டத்திற்கு கோபால் தலைமை வகித் தார். திராவிடர் கழகத்தைச் சேர்ந்த மணிவேல், மதிமுக மணி, காங்கிரஸ் சிபக்கத்துல்லா, தற்சார்பு விவசாயி கள் சங்கம் திருமூர்த்தி, பு.இ. முன்னணி தமிழினியன், விசிக ஜான், மகளிர் செயற்பாட்டாளர் சசிதா, காங் கேயம் சிஎஸ்ஐ ஆயர், தி.க முத்து முரு கேசர், கவி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டனம் முழங்கினர். கதிர்வேல் நன்றி கூறினார்.