திருப்பூர், நவ.4– எல்லா சிபிஎஸ்இ பள்ளிகளுக் கும் இந்தியில் அழகிய வண்ணத் தாளில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் மற்றும் பிரத மர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் படங்களுடன் புத் தகங்கள் தலா மூன்று பிரதிகளை அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ் வொருவர் பெயரிலும் தனித்தனி யாக தமிழில் பிரதமர் மோடி எழுதிய தாக கடிதம், சான்றிதழ் அனுப்பி வைக் கப்பட்டுள்ளது. இதில் சுதந்திரத்தின் அமிர்த காலம் வளர்ச்சியடைந்த பாரதத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம்பரியத்தைக் கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் என குறிக்கப்பட்டுள் ளது. பார்ப்பதற்கு தொலைநோக்கு சிந்தனையுடன் நாடு குறித்த உயரிய சிந்தனையை மாணவர்களிடம் கொண்டு செல்வது போல் தோற்றம் அளித்தாலும் அது மறைமுகமாக பாஜக, ஆர்எஸ்எஸ் கண்ணோட் டத்தை தேன் தடவிய விஷமாக புகுத் தும் வகையில் உள்ளது. கல்வி மற் றும் மாணவர்கள் சந்திக்கும் எண் ணற்ற பிரச்சனைகள் குவிந்து கிடக் கின்றன. அவற்றுக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளாத ஒன்றிய அரசு, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வணிகமயம், வகுப்புவாத மயத்தை புகுத்த எத்தனிக்கிறது. ஒரு புறம் குலத்தொழிலை ஊக்குவிக் கும் வகையில் விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டத்தை அமலாக் கிவிட்டு மாணவர்களிடம் பாரம்பரி யத்தை கொண்டாடுவோம் என குறிப் பிடுகின்றனர். அப்படியானால் குலக் கல்வி, குலத்தொழிலை கொண்டாடு வது என்பதை மறைமுகமாக திணிக் கின்றனர். நவீன அறிவியல், பகுத்த றிவு, ஆய்வு மனப்பான்மையுடன் இருப்பதை நிராகரித்துவிட்டு அடிமை சிந்தனையை அறவே நீக்குதல் என்று கூறியுள்ளனர். மாணவர்கள் உள்ளிட்ட எதிர்கா லத் தலைமுறையின் நல்வாழ்வைப் பற்றி கவலைப்படாத ஆட்சியாளர் கள் தங்கள் அதிகாரத்தை பயன்ப டுத்தி குறுக்குவழியில் தங்கள் கொள் கைப் பிரச்சாரத்தை மாணவர்கள் மனதில் நஞ்சூட்டும் வேலையில் ஈடு பட்டுள்ளனர். இதற்கு கல்வியாளர் கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ள னர்.