கல்வி வளாகத்தில் பதற்றத்தை உருவாக்கும் பாஜக: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
திருப்பூர், ஜூலை 15 - திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் கல்லூரியில் பாஜகவினர் அண்ணாமலையுடன் செல்பி என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி பதற்றத்தை உருவாக்கியதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் சங்கத் திருப்பூர் மாவட்டத் தலைவர் பிர வீன், செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்திடம் மனு அளித்துள்ளனர். அதில், இந்நிகழ்ச்சியை நடத்தியன் மூலம் பாஜகவினர் கல்லூரிக் குள் பதற்றத்தை உருவாக்கி உள்ளனர். எந்த ஒரு மாணவரின் தனிப்பட்ட முறையிலான அரசியல் செயல்பாட்டை அனு மதிக்க வேண்டும். ஆனால் கல்லூரிக்கு சம்பந்தம் இல்லாத வெளிநபர் மூலம் நேரடியாக அரசியல் கட்சியினர் கல்லூரி வளாகத்தில் செயல்பட அனுமதிப்பது கல்வி வளாக அமை தியை சீர்குலைக்கும். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடி யாக தலையிட்டு கல்லூரிக்கு அவப்பெயர் உண்டாகச் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித் துள்ளனர்.
பேராட்டத்திற்கு அனுமதி கேட்டவர்களை அவதூறாக பேசிய காவல் ஆய்வாளர்
சேலம், ஜூலை 15- சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் போராட்டத் திற்கு அனுமதி கோரிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளிடம் அவதூறாக பேசி, பொய் வழக்கு போடுவ தாக மிரட்டிய ஆய்வாளர் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட் டுள்ளது. விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் சுந்தர் தலைமையில் விசிகாவினர் மற்றும் பொதுமக்கள் வியாழனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் புகார் அளித்தனர். அதில், சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், 120 பேருக்கு பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 25 ஆண்டு காலமாகி யும் தேர்வு செய்யப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்காமல் அரசு காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதுகுறித்து கடந்த வருடம் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் பேச்சுவார்த்தை நடை பெற்றது. தொடர்ந்து வீட்டுமனை பட்டா வழங்காத சூழ்நிலை யில் வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி வீட்டுமனை பட்டா வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் அனுமதி கோரி னர். அப்போது, ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் போரட்டத்திற்கு அனுமதி மறுத்தது மட்டுமில்லாமல், தகாத வார்த்தையில் பேசியும், பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விடுவேன் என அவர்களை மிரட்டியுள்ளார். எனவே, மிரட்டல் விடுத்த அந்த காவல் ஆய்வாளர் மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துறை ரீதியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதுகுறித்த விசார ணைக்கு கோட்டாட்சியர் உத்தரவிட வேண்டும் என தெரி வித்தார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஒருவர் கைது
பொள்ளாச்சி, ஜூலை 15- கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கிரமாப்புற உட்பகுதியில் 5 வயது சிறுமியின் தாய் சிறுமியை வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது அதேபகுதி யைச் சேர்ந்த நாகராஜ் (47) என்பவர், வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது சிறுமியின் தாயார் நாகராஜை பார்த்துள்ளார். இதனையடுத்து தாய் சிறுமியிடம் சென்று விசாரித்த பொழுது, நாகராஜ் சிறுமியை பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியின் தாயார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் நாகராஜிடம் விசா ரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர், நாகராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கல்வி வளாகத்தில் பதற்றத்தை உருவாக்குவதா? பாஜகவுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
திருப்பூர், ஜூலை 15 - திருப்பூர் எல்ஆர்ஜி மகளிர் கல்லூரியில் பாஜகவினர் அண்ணாமலையுடன் செல்பி என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி பதற்றத்தை உருவாக்கியதற்கு இந்திய மாணவர் சங் கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய மாணவர் சங்கத் திருப்பூர் மாவட்டத் தலைவர் பிரவீன், மாவட்டச் செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் இது தொடர்பாக வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்திடம் மனு அளித்துள்ளனர். இந்நிகழ்ச்சியை நடத்தியன் மூலம் பாஜகவினர் கல்லூ ரிக்குள் பதற்றத்தை உருவாக்கி உள்ளனர். எந்த ஒரு மாண வரின் தனிப்பட்ட முறையிலான அரசியல் செயல்பாட்டை அனுமதிக்க வேண்டும். ஆனால் கல்லூரிக்கு சம்பந்தம் இல்லாத வெளிநபர் மூலம் நேரடியாக அரசியல் கட்சியினர் கல்லூரி வளாகத்தில் செயல்பட அனுமதிப்பது கல்வி வளாக அமைதியை சீர்குலைக்கும். எனவே மாவட்ட ஆட்சியர் உடன டியாக தலையிட்டு கல்லூரிக்கு அவப்பெயர் உண்டாகச் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொண்டுள் ளனர்.
கல்லூரியில் பாஜக உறுப்பினர் சேர்ப்பா? சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்பூர், ஜூலை 15 – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்தல், மாஸ்க் அணிதல் என அரசியல் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவதாக தேவையற்ற பதற் றத்தை ஏற்படுத்திய பாஜகவினர் மீது சட்டரீதியாக நடவ டிக்கை எடுக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. ஒரு அரசியல் கட்சி கல்லூரி நிர்வாகங்களின் ஒப்புதல் இல் லாமலும், எவ்வித சட்டப்பூர்வ அனுமதியும் பெறாமலும் கல் லூரியில் முகாம் நடத்துவதாக அறிவித்துள்ளது அப்பட்ட மான சட்டமீறல் நடவடிக்கையாகும். இந்த நிகழ்வைத் தடுத்து நிறுத்துவதும், ஏற்பாட்டாளர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவ டிக்கை எடுப்பதும் அவசியம் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத்துக்கு வெள்ளியன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
தாராபுரம் சகுனிபாளையம் சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
தாராபுரம், ஜூலை 15- தாராபுரம் சகுனிபாளையம் செல்லும் தார்ச்சாலை கடந்த 20 ஆண்டு காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதைத் தொடர்ந்து தார்ச் சாலையைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சார்பில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மகேந் திரனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில் கூறியிருப்பது: தாராபுரம் வட்டம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட் டது சகுனிபாளையம் கிராமம். தாராபுரம் திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து சகுனிபாளையம் செல் லும் சாலை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச் சாலை அமைக்கப்பட்டது. சில ஆண்டு காலமாக மழையினால் சேத மடைந்து குண்டும் குழியுமாக இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த சாலையைச் சீர மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறப் பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையாளர் மகேந்திரன் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தை மேம்படுத்தும் பணி : வியாபாரிகள் மகிழ்ச்சி
திருப்பூர் ஜூலை 15- திருப்பூர் மாவட்டம் காங் கேயம் வாரச்சந்தை மிக பழ மையானதாகும். இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் திங் கள் தோறும் நடக்கும் சந்தை யில் பொருட்களை வாங்கி விற்று வருவது வழக்கம். ஆனால் சந்தை பல ஆண் டாக அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்டது. இதனை மேம்படுத்த வியா பாரிகள் விடுத்த கோரிக் கையை ஏற்று 2 ஏக்கர் பரப்ப ளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன. இந்நிலையில் சந்தை மேம்படுத்தும் பணிகள் நடை பெற்று வருவதால் வியாபா ரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.
காத்திருப்புப் போராட்டம் நடத்தியதால் 14 பேருக்கு பட்டா தர உறுதியளிப்பு
திருப்பூர், ஜூலை 15 - இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 14 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க உறுதி அளிக்கப் பட்டது. வெள்ளகோவில் ஒன்றியம், உப்புப்பாளையம் பகுதியில் மோசடி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி யது கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப் பட்டது. கடந்த 13 வருடங்களாக அங்கு காலியாக உள்ள 20 வீட்டுமனைப் பட் டாக்களை சொந்த வீடு இல்லாமல், வீட்டுமனைப் பட்டா கேட்ட உப்புப்பா ளையம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சுமார் 20 பேர் விண்ணப்பம் அளித்து பல் வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி னர். மேற்கண்ட நிலத்தில் அவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க கேட்டு காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று தலித் விடு தலை இயக்கத்தின் தலைவர் ச.கருப் பையா தலைமையில் உப்புப்பாளை யம் பகுதி மக்கள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆதிதிராவிடர் நலத் துறை தனி வட்டாட்சியர் விடுமுறையில் சென்றிருந்த நிலையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் வட்டாட்சியர் புவனேஸ்வரி, காவல் துணை கண்காணிப்பாளர் குமரேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் அளித்த உத்தரவின் பேரில், முதற்கட்டமாக தகுதியுள்ள 14 பேருக்கு வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) இல வச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுவ தாக வட்டாட்சியர் புவனேஸ்வரி தெரி வித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கும் அபாயம்
கோவை, ஜூலை 15- பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வெள் ளலூர் தரைப்பாலம் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், சிங்காநல்லூர் - வெள்ளலூர் இடையே நொய்யல் ஆற்றின் மீது தரைப்பாலம் அமைக் கப்பட்டது. ஏற்கனவே இப்பகுதியில் இருந்த பாலம் பழுத டைந்திருந்த நிலையில், அருகிலேயே மற்றொரு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மேலும், பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கோவையில் பருவமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளலூரில் உள்ள தரைப் பாலத்தின் மீது ஆற்றுநீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சமடைந்துள்ளனர். சிங்காநல்லூரில் இருந்து வெள் ளலூர் செல்லும் பிரதான சாலையாக உள்ள இந்த சாலையில் தரைப்பாலம் அவ்வப்போது ஆற்று நீரில் மூழ்கிவிடுவதால் குறித்த நேரத்திற்குள் பயணிக்க முடியமல் மக்கள் அவதிய டைந்து வருகின்றனர். இந்நிலையில், புதனன்று பெய்த மழையால் தரைப் பாலம் மூழ்கும் அளவுக்கு நொய்யலில் தண்ணீர் சென்றது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம் வெள்ளலூரில் மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த னர்.
திருச்சி சாலை மேம்பாலத்தில் கம்பி வேலி
கோவை, ஜூலை 15- கோவை - திருச்சி சாலை யில் அடுத்தடுத்து மூன்று விபத்துகள் ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். இந்நி லையில் சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் சென்று பாலத்தில் தொடர் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பது குறித்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரிக ளுடன் ஆய்வு மேற்கொண் டார். இதனைத்தொடர்ந்து இந்த மேம்பாலத்தில் தொடர் விபத்துகளை தடுக்க மேம்பாலத்தின் இருபுறமும் சுமார் 10 அடி உயரத்துக்கு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப் பட்டது. மேலும் தற்போது அந்த பகுதியில் வாகன போக்குவரத்தின் வேகத்தை குறைக்க சாலையின் நடு வில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள் ளது.
ஆதிதிராவிடர் விடுதியில் சேர ஆட்சியர் அழைப்பு
ஈரோடு, ஜுலை 15- ஈரோடு மாவட்டம், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் 28 பள்ளிவிடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் இயங்கி வருகின்றன. 2022-23 ஆம் கல்வியாண்டில் பயி லும் மாணவ, மாணவியர் கள் தாங்கள் பயிலும் பள்ளி, கல்லூரிக்கு அருகாமையில் உள்ள மேற்கண்ட விடுதி களில் தங்கி படிக்க விருப்ப முள்ளவர்கள் விடுதியில் சேருவதற்கான விண்ணப் பங்களை வரவேற்கப்படு கின்றன. இதற்காண விண் ணப்பங்களை அந்தந்த விடு திக்காப்பாளரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறு வனங்கள் மூலமாக அளிக் கப்பட வேண்டும். விடுதியில் சேர்க்கப் படும் மாணவ, மாணவியர் பெற்றோரின் ஆண்டு வரு மானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தில் மாணவ, மாணவியரின் புகைப்படம் ஒட்டி, பயிலும் கல்வி நிறுவனங்களின் சான்றொப்பம் பெறப்பட்டி ருக்க வேண்டும். கட்டாய மாக ‘வங்கிக் கணக்கு” துவங் கப்பட்டிருக்க வேண்டும். பள்ளி விடுதிகளில் சேருவ தற்கான விண்ணப்பங்கள் 20.07.2022 வரையும், கல்லூரி மாணவ, மாணவியர் விடுதி களுக்கு 05.08.2022 வரையும் பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ண ணுண்னி தெரிவித்துள்ளார்.