தாராபுரம், மார்ச் 8 - திரிபுரா தேர்தலில் பாஜக வெற்றியை தொடர்ந்து மார்க் சிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட எதிர்கட்சியினர் மீதான கொலை வெறித் தாக்குதலை கண்டித்து தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் அண்ணாசிலை முன்பு புதனன்று இந்த கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி. பொன்னுச்சாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கண் டன கோசங்கள் எழுப்பப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி தாலூக்கா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் முத்து சாமி, கோவிந்தராஜ், ராஜேந்திரன், செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.